Friday, August 06, 2004

சிவாஜி கணேசன் - ஒரு சரித்திரம்

Source : தமிழோவியம்

கவியோவியம்
சிவாஜி கணேசன் - ஒரு சரித்திரம்
-----------------------------------------------

திரையில் நீ சிரிக்கிறாய்,
நாங்கள் குதூகலம் அடைகிறோம்-
நீ துடிக்கிறாய், நாங்கள் பதறுகிறோம்-
நீ சவால் விடுகிறாய், நாங்கள் ஆயத்தம் ஆகிறோம்-
நீ அழுகிறாய், நாங்கள் உடைந்து போகிறோம்.

கை அசைத்து பிரிந்திருந்தால்
பரவாயில்லை....
இதயம் அசைத்து அல்லவா
இளைப்பாற சென்று விட்டாய் ?

உனக்கு கிடைத்த
கைத்தட்டல்கள் எல்லாம்
உயிர் கொடுக்குமென்றுகணக்கிட்டால் கூட...
ஓராயிரம் கோடி ஆண்டுகள்
நீ வாழ்ந்திருப்பாயே?

'வானம் பொழிகிறது'
வசனத்தை பேசிப்பார்க்காமல்
ஒரு தமிழ்மகனாவது
இருந்திருந்தால்...
பாவம், அவனது புலன்களில்
ஏதேனும் பழுதுக்ள் இருந்திருக்கும்!

உன்னை மாதிரி
நடிக்க பழகியே...
இங்குசிலர் நடிகர்களாகி விட்டனர் !

குணத்தளவில் நீ
குழந்தையாக இருந்ததால் தான்
அரசியல்நாகம்
உனனைத் தீண்டிய போது
எஙகளுக்கு விஷம் ஏறியது!

நாங்கள் உன்னைத்தலைவனாய் தான் கொண்டாடினோம்..
அரசியல் தலைவனாய் அல்ல-
குடும்பத்தலைவனாய்!

எங்கள் கலைத்தாயின்
தலைமகனை
கரை வேட்டிகளுக்கும்,
கதர் சட்டைகளுக்கும்
தத்து கொடுப்பதற்கு
நாங்கள் ஒப்புக்கொள்வதாய் இல்லை!!!

'ப்ரிஸ்டிஜ் பத்னாபன்',
'பாரிஸ்டர் ரஜினிகாந்த்',
'சிக்கல் ஷண்முகசுந்தரம்'
என்று கதாப்பாத்திரங்களின் பெயர்கள் கூட
மனப்பாடமாகி
மனசுக்குள் சப்பண்மிட்டு
அமர்ந்து விட்டதே?!

நிஜத்தில் திடீரென
நிகழ்ந்து விட்டால்
தாங்கமுடியாதென்பதால் தான்,
திரைப்படங்களில் இறந்து காட்டி
ஒத்திகை குடுத்தாயோ...?

எது எப்படியோ...
விண்ணுலகில்
அப்பரில் ஆரம்பித்து
கட்டபொம்மன் வரை
உனக்கு நன்றி செலுத்த வேண்டுமாம்-
வரிசை அங்கும்
பெரிசாய்தான் இருக்கிறது....
உனக்கு வந்த இறுதிஊர்வலம் போல்!

- அரூண்

No comments:

Post a Comment