Wednesday, December 22, 2010

Times Now-க்கும் காங்கிரஸுக்கும்...ட்டொய்ங்... :)

Times Now-ன் களவானித்தனம்...அவர்கள் பாஷையில் சொல்வதென்றால் Times Now Exposed...


சுரேஷ் என்பவர் ஒரு ட்வீட் செய்திருக்கிறார். அவர் ட்விட்டர் ஐ.டி. @sureshnakhuaசுரேஷ் அந்த ட்வீட் இதுதான். "Congress is always worried abt MODI and loses its focus". அதாவது, "காங்கிரஸ் எப்போதுமே மோடியை பற்றியே கவலை கொண்டு தன் பார்வையை இழக்கிறது".


அன்றைக்கு Times now-ல் சுரேஷ் சொன்னதாக வந்த செய்தி, "காங்கிரஸ் மோடியை பற்றி கவலைக்கொண்டு தன் பார்வையை இழக்கக்கூடாது". முன்னது ஒரு விமர்சனம். பின்னது, Times Now சொன்னது, அட்வைஸ் தொனியில். சுரேஷ் காங்கிரஸ் அனுதாபியாக்கப்பட்டார்.
இதை பார்த்து டென்ஷனான சுரேஷ், Times Now-க்கு ஒரு மெயில் தட்டி வருத்தம் தெரிவிக்குமாறு கோருகிறார். அவர் அனுப்பியது அர்னாப் மற்றும் Times Now-kku. அந்த மெயிலின் சாராம்சம், "நீங்கள் நான் அனுப்பிய ட்வீட்டை உங்களுக்கு தேவையான விதத்தில், உங்களுக்கு தேவையான அர்த்தத்தில் மாற்றிக்கொண்டுள்ளீர்கள். என்னை காங்கிரஸ் அனுதாபி போல சித்தரித்துள்ளீர்கள். இதனால் என்னுடைய அடிப்படை கருத்துரிமை பறித்துள்ளீர்கள். அதனால் எனக்கு உங்களின் வருத்தம் எனக்கு எழுத்தால் தெரிவிக்கவேண்டும். அவ்வாறு இல்லையெனில், இதை பற்றி News Broadcasting Association, Ministry of Information and Broadcasting மற்றும் சட்டபூர்வமாக நடவடிக்கை எடுக்க எனக்கு உரிமை உள்ளது. மேலும், இணையத்தில் இதை பற்றி பிரசாரம் செய்யவும் எனக்கு உரிமை உள்ளது" என்கிறார்.
5 மெயில்கள் + 7 நாட்களுக்கு பிறகு, Times Now-ன் திரு. Hector Kenneth, Senior Editor, "Times Now" பதிலளிக்கிறார். என்னவென்று? மற்றொருவர் உங்களின் அதே போன்ற பெயரில் கருத்து தெரிவித்திருக்கிறார். அதனைத் தான் தாங்கள் தவறாக குறிப்பிட்டிருக்கிறீர்கள் என்று.
இதற்கு சுரேஷ் பதிலளிக்கையில், 18ம் தேதி இரவு 9:13 முதல் இரவு 11:58 வரை Newshour-க்கு அனுப்பப்பட்ட ட்வீட்களின் தொகுப்பை அனுப்பி அதில் எதுவும் நீங்கள் சொன்னது போல் வேறொருவர் இல்லை என்கிறார். அதனால் அவர்கள் சொல்வது பொய் என்றும் வாதிடுகிறார். "நீங்கள் குறிப்பிட்டது போல், தாங்கள் ஒரு சீனியர் எடிட்டர். இதை போன்ற வாதம் வைக்கும் பொழுது கொஞ்சம் பொறுப்பு தேவை" என்கிறார்.
பின், அந்த 7 நாட்களில் அர்னாப் இந்த விஷயம் மனித தவறு என்றும் மன்னிக்க வேண்டுவதாகவும் கோருகிறார். அப்புறம், "Times Now as you know has no political bias, or agenda, and I would like to assure you once again on this account" என்கிறார் அர்னாப் கோஸ்வாமி.
ஆனால், Hector Kenneth இன்னும் அதே பல்லவியை பாடுகிறார்.
பின் ஒருவாறு வருத்தம் தெரிவிக்கிறார்.
Famous quote from this movie:
Arnab Goswami: "Times Now as you know has no political bias, or agenda, and I would like to assure you once again on this account" ;)


நன்றி: சுவாதி ப்ரதீப் மற்றும் அர்னாப் கோஸ்வாமி ;)


பிற்சேர்க்கை - 16-Mar-2011:
http://www.hindu.com/2010/12/20/stories/2010122055720200.htm


Fake tweets aired on TV news show
Priscilla Jebaraj


NEW DELHI: A recent controversy about fake Twitter comments being run onscreen during a news show has raised questions about the reliability of instant viewer feedback. From live SMS polls to tweeted views to texted queries, many of the methods used to increase the “buzz” of viewer-interactivity in real-time can be misused unless adequate filters are put in place.


On his ‘India at 9' programme on December 16, CNN-IBN's Editor-in-chief Rajdeep Sardesai discussed the question ‘Should lobbying be legalised?'


IBN sources say the question of the day is usually posted on the channel's website around noon. On this particular day, however, the question was posted at 5-07 p.m., according to the time-stamp on the website. Since there were not enough responses posted, an IBN staffer quickly concocted his or her own comments and aired them on screen, attributing them to five different Twitter IDs, according to IBN sources.


A suspicious viewer checked out the IDs and discovered that while three accounts were non-existent, the others had posted no tweets at all. He indignantly posted about this at dalalmedia.posterous.com (which, incidentally, has just two blog-posts), from where it spread within the blogosphere and among twitterati.


Mr. Sardesai initially responded to questions on Twitter, saying: “The comments that were picked up from ibnlive.com. should have been attributed to the web, not to twitter.” As the IBN website does not contain any of these particular comments, his listeners remained sceptical. However, an apology posted on the website later admitted that “This viewer feedback was wrongly attributed to Twitter accounts. We deeply regret the error and apologise for the same. We will take all steps to ensure that this is not repeated.”






Mr. Sardesai echoed this apology when contacted by The Hindu. “It was an unfortunate lapse that should not have happened. We have put in place systems to ensure it doesn't happen again,” he said, in a welcome example of the accountability needed to maintain the credibility of the news media.


Some bloggers have portrayed this as an example of media manipulation, noting that all five of the “fake” comments supported the legalising of lobbying -- despite the fact that a majority of the comments now on the IBN website reveal that the public is against such legalisation.


Mr. Sardesai vigorously refuted such suggestions, pointing out that the course of neither the debate, nor his final “Editor's Take” reflected the opinions of the “fake” comments in any way. “The problem is not lobbying, it's the misuse of authority and discretionary powers. Middlemen will always exist in a corrupted and opaque system that privileges influence-peddling. You can legislate lobbying, but can you legislate morality?” said the Editor's Take during the show.


It is clear that TV news editors are aware of the potential for misuse present in instant feedback. Several reputed channels have cut back on these gimmicks in recent years, despite the desire to display interactivity with their viewers. Times Now does not run SMS polls at all, according to Arnab Goswami, Editor-in-Chief of the channel.


Mr. Sardesai said he would consider revealing the total number of SMSs received during the poll run on CNN-IBN's 10 p.m. show, rather than just posting percentages, which can give a distorted picture of public opinion. Instead of “live” feedback supposedly received during the course of a show, the channel now uses only feedback that has been previously posted on its website or sent to its Twitter ID, so that there is time to put a filter in place before comments are aired.

Wednesday, November 17, 2010

Inception (2010) - விமரிசனத்துக்கு அப்பால்...

சமீபத்தில் பார்த்து அதிசயித்த படம், இந்த Inception. Christopher Nolan தான் இந்த கிரியேட்டர். மேக்கிங்கில் தனித்துவம் கொண்டிருக்கும் இயக்குநர்களுக்கு மத்தியில், தன் திரைக்கதையால் தனித்துவம் கொண்டிருக்கும் இயக்குநர் தான் இந்த நோலன்

இந்த படத்தை பற்றி ஏற்கனவே ஜெய் அவர் ஸ்டைல்ல எழுதிய அழகான விமர்சனம். இருந்தாலும், சில விஷயங்களை சொல்லவேண்டும், படம் பார்ப்பவர்களுக்கு உதவியாக சில டெக்னிக்கல் விஷயங்கள். இந்த பதிவு இந்த படத்தை பற்றின என் 'ஆராய்ச்சியின்' பதிவும் கூட (சிரிக்கப்படாது).


கதையும் அதன் முடிச்சும் பிரமிக்க வைப்பவை. ஒரு கனவை ஒருவர் காணமுடியும். இரு வேறு மனிதர்கள் 'சேர்ந்து' ஒரு கனவை காணமுடியுமா? சினிமாவில் முடியும். நிஜத்தில்? அதற்கு பயிற்சி தேவை. இந்த படம் இந்த Sharing based கனவை பற்றி தான். மேலும், கனவுக்குள் கனவுக்குள் கனவுக்குள் கனவு...மொத்தம் 5 நிலைகள் (layers).

Inception-ன் சுவையான technical rules-க்கு போகும் முன், முதலில் கதை சுருக்கம்:

நாயகன் காஃப் (Cobb), நம்ம டி காப்ரியோ, ஒரு Con artist. அழகாக திரைக்கதை அமைத்து திருடுபவன். இந்த முறை திருடுவது அனைவரின் (இதயத்தை அல்ல) மூளையை. மூளைக்குள் இருக்கும் தகவலை. சைட்டோ (Saito) என்ற தொழிலதிபரிடம் தன் வேலையை காட்ட முனைய, வெற்றியின் அருகில் வந்து, ஒரு சிறு தவறால், தவற விடுகின்றனர் காஃப் & டீம். கனவில் டி காப்ரியோவின் மனைவி மால் (Mal) நுழைந்து காரியத்தை கெடுத்துவிடுகிறாள். இவர்களை பற்றி அறிந்தே சைட்டோ இந்த நாடகத்தை டி காப்ரியோவை நடத்த விடுகிறான் (auditioning). தப்பிக்க முயலும் போது சைட்டோ காஃப் & டீமை வழிமறிக்கிறான். காரணம், சைட்டோவிற்கு காஃபால் ஒரு காரியம் நடைபெற வேண்டியிருகிறது.


காஃப்பால் கனவில் இருந்து ஒரு தகவலை எடுக்க முடியுமென்றால் (extraction), ஏன் விதைக்க (inception) முடியாது? அதனால் தன் பிஸினஸ் எதிரி பிஸ்சரின் (Fischer) மனதில் ஒரு தவறான் தகவலை விதைக்கவேண்டும். காஃப்பிற்கோ அமெரிக்கா திரும்பவேண்டும். தன் மனைவி(!) மால் மரணத்திற்கு இவன் தான் காரணம் என்பதால் அமெரிக்க போலீஸ் இவனை தேடுகிறது. சைட்டோவும் அந்த ஆப்பரேஷனுக்குள் வருவேன் என்கிறான். காரணம் இவர்கள் வெற்றி பெற்றார்களா என்று அறிய. காஃப் சம்மதிக்கிறான்.

மால் தான் காஃப்பின் மனைவி. இதற்கு முன் இவர்கள் இருவரும் தான் இந்த 'வேலை'யை காட்டிக் கொண்டிருந்தனர். இருவரும் பரிசோதனை முயற்சியாக அடிக்கடி இந்த கனவின் மூலம் வாழ்ந்து கொண்டிருந்த போது, மாலுடன் limbo என்ற ஸ்டேட்டுக்குள் சுமார் 50 வருடங்கள் வாழ்ந்திருந்தான். limbo - பிறகு வருகிறேன். காஃப் செய்யும் அதிபுத்திசாலித்தனத்தின் பக்க விளைவால் மால் இறக்கிறாள்.

நிற்க. சைட்டோவின் வேலைக்காக தனக்கான ஒரு டீமை உருவாக்கிக்கொள்கிறான் காஃப். தன் தந்தை மைல்ஸ் (Miles) உதவியுடன் அரியாட்னி (Ariadne) என்ற திறமையான மானவியை Architect ஆக்கிக் கொள்கிறான். ஈயம்ஸ் தன் உருவத்தை (கனவில் தான்) மாற்றுவதில் கில்லாடி. யூசுப் மயக்க மருந்து கலவையில் கில்லாடி. ஆர்தர் - the Point Man. மைல்ஸ் தான் கனவுக்குள் ஊடுருவும் கலையை உருவாகியவர். ஒவ்வொரு நிலையிலும் ஒவ்வொருத்தர் கனவு கான்கிறார்கள்.

நிஜம், நிலை 1 - விமானத்தில்
பிஸ்சரின் தந்தை மரணமடைய அவன் லாஸ் ஏஞ்சல்ஸ் செல்லும் விமானத்தில் கூடவே பயனித்து அவனுக்கு தெரியாமல் மயக்க மருந்து கொடுத்து தங்கள் கனவில் சேர்த்துக் கொள்கிறார்கள். கவனிக்க, இந்த முயற்சி வெற்றி பெற்றால் மட்டுமே காஃப்பால் அமெரிக்காவுக்குள் நுழைய முடியும், சைட்டோவின் ஒரே ஒரு ஃபோன் கால் மூலம். தோற்றால் லாஸ் ஏஞ்சல்ஸ் இறங்கியதுமே Coff-க்கு Cop-ஆல் Cuff தான். ஜெயிலுக்கு போக வேண்டும்.

கனவு, நிலை 2 - மழையில்
பிஸ்சரை காஃப் & டீம் கடத்துகின்றனர். ஆனால், பிஸ்சரின் ஆழ்மனம் உருவாக்கிய கமாண்டோக்கள் இவர்களை தாக்க, சைட்டோ படுகாயமடைகிறான். அவனை அங்கேயே கொன்று நிஜ உலகில் முழிக்கவைக்கவும் முடியாது. காரணம், பல நிலைகளில் பயனிக்க வேண்டியிருப்பதால், 'மேலே' அனைவருக்கும் அதிகமாக தூக்க மருந்து கொடுக்கபட்டிருக்கிறது. பின், அங்கு பிஸ்சரின் காட்ஃபாதர் ப்ரௌனிங்குடன் (Browning) பிஸ்சரை பேசவைக்கிறார்கள். ஈயம்ஸ் தான் ப்ரௌனிங்க் தோற்றத்தில் பேசுகிறார். இன்னொரு உயில் இருப்பதாக பிஸ்சரை நம்ப வைக்கிறார்கள். ஒரு வேனில் அனைவரையும் ஏற்றி யூசுப் வண்டியை ஓட்ட அனைவரும் அதற்குள் இன்னொரு கனவுக்கு செல்கிறார்கள்.

கனவு, நிலை 3 - ஆப்பரேஷன் சார்லஸ் - ஹோட்டலில்
இடம் ஒரு ஹோட்டல். பிஸ்சரிடம் சென்று நீ எப்படி இங்கு இருக்கிறாய் என்று உன்னால் உனரமுடிகிறதா என்று கேட்டு, அவன் இருப்பது ஒரு கனவுலகம், அந்த கடத்தலை நடத்தியதே ப்ரௌனிங்க் தான் என்று நம்பவைக்கிறார்கள். அதனால் ப்ரௌனிங்கின் கனவில் சென்று உண்மையை கண்டறியலாம் என்று முடிவெடுத்து அங்கு வரும் (பிஸ்சரின் ஆழ்மன) ப்ரௌனிங்கை கடத்தி அவனையும் மயக்கி இன்னொரு கனவுக்குள் செல்கிறார்கள்.

கனவு, நிலை 4 - பனிப்பிரதேசத்தில்
ப்ரௌனிங்கின் ரகசியம் அங்குள்ள சேஃப் லாக்கரில் இருக்கிறது. அதை உடைக்க வேண்டியது பிஸ்சரின் வேலை. பிஸ்சர் அங்கு வரும் மாலால் கொல்லப்படுகிறான். அவன் லிம்போவிற்கு செல்கிறான். அவனை மீட்க காஃபும் அரியாட்னியும் அடுத்த நிலைக்கு செல்கின்றனர்.

கனவு, நிலை 5 - லிம்போ
அங்கு மால் காஃபை அங்கேயே தங்கும்படியும் அப்படி நடந்தால் பிஸ்சரை விட்டுவிடுவதாகவும் கூறுகிறாள். அதனால் அவள் காஃப்பை கொல்ல முயற்சிக்கும் போது அரியாட்னியால் மால் கொல்லப்படுகிறாள். பிஸ்சர் திரும்புகிறான். அரியாட்னியும் திரும்புகிறாள். ஆனால், காயம்பட்ட சைட்டோவும் இறந்து லிம்போவுக்குள் விழுந்துவிடுவதால் அவனை தேட காஃப் லிம்போவுக்குள்ளேயே இருக்கிறான். பின் அவனை கண்டுபிடித்து அவனுக்கு புரியவைத்து வெளியேறுகின்றனர். நான்காம் நிலையில் இருக்கும் சேஃப் லாகரை திறந்தால் அங்கு பிஸ்சரின் தந்தை இருக்கிறார். அதற்குள் இருக்கும் மற்றொரு சேஃப் லாகரை திறந்தால் பிஸ்சருக்கு விடை கிடைக்கிறது. இரண்டாம் நிலை கனவில் உணருகிறான், அவன் தந்தை அவனை யாரையும் சார்ந்திருக்காமல் தனி ஆளாய் உருவாகவேண்டும் என்று விரும்பிகிறார் என்று. இது தான் இவர்கள் விதைக்க நினைக்கும் எண்ணமும் கூட. இந்த எண்ணத்தால் தன் தந்தையை சார்ந்திருக்காமல் இருக்க அவருடைய சாம்ராஜ்யத்தை உடைக்கலாம் இல்லையா?


வேலை முடிந்ததும், ஒவ்வொரு முந்தைய நிலைக்கு திரும்ப கிக் தேவை. அதனால் யூசுப் பாட்டு போட்டு பின் வேனை ஒரு பாலத்தின் மேல் இருந்து தண்ணீருக்குள் தள்ளுகிறான். அந்த வேன் மேலிருந்து கீழ் விழும்போது இருக்கும் 5 வினாடிகளில் நடப்பவை தான் கடைசி ஒரு மணிநேர படம். இரண்டாம் நிலையில் ஆர்த்தர் (Arthur) அனைவரையும் லிஃப்டில் 'போட்டு' பாம் வைத்து கிக் கொடுக்கிறான். மூன்றாம் நிலையில் ஈயம்ஸ் அந்த பனிபிரதேசத்தை வெடிவைத்து தகர்த்து கிக் கொடுக்கிறான். நான்காம் நிலையில் (லிம்போ) அரியாட்னி மேலிருந்து குதித்தும், பிஸ்சரை தள்ளிவிட்டும் கிக் கொடுக்கிறாள்.

Inception-ன் சுவையான technical rules:

* நிஜ வாழ்வுக்கும் கனவுக்கும் நேரமானது 1க்கு 20 என்ற விகிதத்தில் மாற்றம் உள்ளது. ஒருவர் 5 நிமிடம் கனவு கான்கிறார் என்றால், அந்த கனவுலகில் அதன் நீளம் 'சுமார்' 20x5 நிமிடங்கள். கனவுக்குள் கனவு என்னும் போது, நிஜம் முதல் நிலை (layer). கனவு இரண்டாம் நிலை. நிஜத்தில் 5 நிமிடங்கள் என்னும் போது, கனவுலகில் அதன் நீளம் சுமார் 100 நிமிடங்கள். அந்த கனவுக்குள் ஒரு கனவு (மூன்றாம் நிலை) என்னும் போது, அந்த நிலையில் அதன் நீளம் சில வாரங்கள் அதாவது compounded. நான்காம் நிலையில், சில வருடங்கள். இப்படி, அந்த நிலைகளை பொருத்த அளவில் காலம் மாறுபடும், ம்ஹூம், அதிகமாகும்.
ஆக, முதல் நிலையில் ஐந்து நிமிட கனவு என்பது கனவுலகின் நான்காவது நிலையில் சுமார் 50 வருடங்கள். லிம்போவில்...அம்போ. மேலும், நிஜம் + மூன்று நிலைகளும் அதற்கு மேலும் செல்வது அந்த கனவையே குலைத்துவிடும் (unstable).

* கனவுக்குள் கனவு என்னும் போது அந்த கனவை நிகழ்த்த இருக்கும் Extractor-க்கு நிறைய நேரம் கிடைக்கும். ஆனால், நிலைகள் அதிகமாக அதிகமாக ரிஸ்க் அதிகம். கனவில் காணாமல் போய்விட்டால் தொலைந்தவர் செல்லும் இடம் தான் limbo. காணாமல் என்றால்? நீங்கள் limbo-வில் இருந்தாலும் நிஜத்தில் அதிகபட்சமாக 1-10 மணிநேரம் தான் இருப்பீர்கள். ஆனால், லிம்போவில் அது சுமார் 1000-2000 வருடங்கள், சில நேரங்களில் முடிவு இல்லாதது. வலி மனதில்/மூளையில் என்பதால் லிம்போ உங்களை மனரீதியாக பாதிக்கக்கூடியவை. கனவு முடிந்தாலும் உங்களால் நிஜ வாழ்க்கைக்கு திரும்ப முடியாது. அதற்கு நிறைய பயிற்சியும் சாதுர்யமும் தேவைப்படும். அந்த சாதுர்யம் இல்லாததால் தான் மால் மீளமுடியாமல் தற்கொலை செய்துகொள்கிறாள், நிஜத்திலும்(!)

* எல்லோரும் சேர்ந்து ஒரு கனவை கான்பதற்கு, அந்த ஒவ்வொரு நிலை கனவையும் ஒருவர் மட்டும் கன்ட்ரோல் செய்ய முடியும். அந்த கனவை கலைக்க ஒவ்வொரு நிலையிலும் யாராவது அங்கேயே இருந்து கொள்ள வேண்டும். ஆனால், லிம்போ என்பது எவர் கன்ட்ரோலிலும் இல்லாதது. அது ஒரு shared dream state. இதற்கு முன் லிம்போவில் சென்றவர்கள் உருவாக்கியவைகளின் மிச்ச சொச்சம் அதில் இன்னும் இருக்கும். காஃப்பும் மாலும் ஏற்கனவே அங்கு இருந்ததால் அவர்கள் 50 வருடங்களாக கட்டிவைத்த கட்டிடங்களின் மிச்சம் பின் கடைசியில் அவன் மறுபடியும் செல்லும் போதும் இருக்கின்றன.

* தகவலை திருடுவதற்கு காஃப் ஒரு வழிமுறையை உருவாக்கிக்கொள்கிறான். அதாவது யாரிடம் இருந்து தகவலை திடுகிறானோ அவர் தான் the mark. அவரிடம் முதலில் எந்த தகவலை திருடப்போகிறோமோ அந்த தகவலை ஒரு சேஃப் லாக்கரில் வைத்துவிட்டதாக நம்பவைக்கப்படுகிறார். அந்த சேஃப் லாக்கர் தான் the mark-ஐ பொருத்தவரை சேஃப் இல்லையா? பின் அந்த லாக்கரை உடைத்து தகவலை திருடுவது தான் அந்த கனவின் மீதி திரைக்கதை. இங்கே அந்த சேஃப் லாக்கர் என்பது the mark-ன் ஆழ்மனம் (subconscious). ஆழ்மனதில் அந்த தகவல் புதைக்கப்பட்டிருப்பதாக அர்த்தம்.

* கனவு நிகழும் இடம் architect-ஆல் வடிவமைக்கப்பட்டது. அது அரியாட்னி. எல்லோரும் கனவு காண்பார்கள். மற்றவைகளை the mark நிரப்பும். ஒரு லாக்கரை உருவாக்கினால் the mark அதில் தன் ரகசியத்தை நிரப்பும். மற்றவர்களுக்கு எங்கே/எப்படி எடுப்பது என்று தெரியும். எப்பூடி?

* காஃப் ஒரு காலத்தில் architect-ஆக இருந்தாலும், மால் மறைவுக்கு பின் கனவுலகை கட்டுவதை நிறுத்திவிட்டான். காரணம், இவனுக்கு கனவுலகின் கட்டமைப்பு தெரிந்தால் கட்டாயம் மாலுக்கும் தெரிந்துவிடுமல்லவா? அதான்.

* இன்னொரு இன்ட்ரஸ்டிங் பாடின்ட். கனவில் இருக்கும் atmosphere characters எல்லாமே கனவு காண்பவரின் ஆழ்மன உருவாக்கங்கள். Atmosphere characters என்பவை இடத்திற்கு தகுந்தார் போல் இருக்கும் கேரக்டர்கள். உதா, டீக்கடையில் காட்சி என்றால், ஒரு நாலைந்து பேர் அமர்ந்து டீ குடிப்பார்கள் / பேப்பர் படிப்பார்கள் இல்லையா? அவர்கள் தாம்.
கனவை கலைப்பவர்களை இந்த கேரக்டர்கள் ரத்தத்தில் உள்ளே நுழைந்த எதிரிகளான நோயை வெள்ளை அணுக்கள் தாக்குவது போல தாக்க ஆரம்பிப்பார்கள்.

* கனவில் ஒரு கதாபாத்திரத்தில் இருப்பின் ஆரம்பம் தெரியாது. கனவில் திடீரென்று ஒரு கதாபாத்திரம் தோன்றும். அந்த கேரக்டர் அந்த இடத்தில் எப்பொழுது வந்தது என்ற கேள்வியை நம் உள்மனது கேட்காது, இல்லையா? இதை உனரவைத்தாலேயே ஒருவர் கனவில் தான் இருக்கிறார் என்பதை தெளிவுபடுத்திவிடமுடியும். (பார்க்க: "Charles" - கீழே)

* தாம் தற்போது இருப்பது கனவா / நிஜமா என்று அறிய ஒவ்வொருத்தரும் தன்னுடன் ஒரு சிறு பொருளை வைத்திருப்பர். அதன் பெயட் டோட்டம் (totem). அது எந்த ஒரு கனவிலும் கூடவே எடுத்துக் கொண்டு செல்ல வேண்டும். உதா, காஃப் வைத்திருக்கும் totem ஒரு சிறு பம்பரம் போல் இருக்கும். அதை சுற்றிவிட்டால் இரு action-கள் நடக்கும். நிற்காமல் சுற்றிக்கொண்டே இருந்தால் அது கனவு என்று பொருள். சில வினாடிகளில் நின்று விட்டால் அது நிஜம் என்று பொருள். சரி! இது எதற்கு? அடுத்த பாயின்ட் அதை சொல்லும்.

* நீங்கள் தூங்கிக் கொண்டிருக்கிறீர்கள். கனவில் நீங்கள் கீழே விழுவது போல் இருக்கும். சடாரென்று முழிப்பீர்கள். இப்படி நடப்பதற்கு பெயர் Hypnic jerk. சிம்பிளாக kick. கனவில் இருந்து ஒருவர் திடீரென்று வெளியேற வேண்டுமென்றால் இந்த kick-கை பயன்படுத்தலாம். வெளியேற நிறைய காரணம் இருக்கும். உதா, கனவு தோல்வியை நோக்கி செல்லும் போது, அதிலிருந்து தப்பிக்க. அப்படி அந்த கிக்கை கொடுக்கமுடியாத பட்சத்தில் மற்றொரு வழி தற்கொலை/கொலை. கனவா அல்லது நிஜமா என்று தெரியாமல் நிஜத்தில் கொலை/தற்கொலை செய்துகொண்டால்? அதற்கு தான் இந்த totem-கள்.

* ஒரு கனவில் ஒருவர் தான் அந்த கனவை கன்ட்ரோல் செய்வர். அந்த level கனவை முடித்து வைப்பவர் அவராக தான் இருக்க முடியும். மற்றவர் அனைவரும் தூங்கிய நிலையில் இருக்க, இவர் மட்டும் விழித்த(!) நிலையில் இருப்பார். கிக்கை நிறைவேற்றுவார்.

* ஒருவர் தான் ஒரு கனவின் ஓனர். அவர் திடீரென்று அந்த கனவைவிட்டு வெளியேறினால்? உதா, கனவு ஃபெயில் ஆகும் போது கனவுக்குள் இருக்கும் காஃப் ஆர்த்தரை சுட்டுவிட (kick), ஆர்த்தர் தான் அந்த கனவின் இன்சார்ஜ் என்பதால் அவர் வெளியேறியவுடன் அந்த கனவே சிதைய ஆரம்பிக்கும். கட்டிடங்கள் இடியும். ஒவ்வொரு கேரக்டரும் மறைந்து விடுவர். மாஸ்டரே இல்லாமல் எப்படி டீக்கடை நடத்த முடியும்? ;)

* கிக்கை பயன்படுத்தும் முன் சம்பத்தப்பட்ட கனவுலகின் கன்ட்ரோலருக்கு கொடுக்கப்படும் சிக்னல் ஒரு இசை. அந்த இசையை அவருக்கு ஒரு வாக்மேன் மூலம் போட்டுவிட, கனவுலகில் அவர் தெரிந்து கொள்ள வேண்டும், இந்த கனவு முடிக்கப்படப்போகிறது என்று.

* 'மேலே' ஏதேனும் நடந்தால், அது கனவிலும் நிகழும். நிஜத்தில் தண்ணீரில் விழுந்தால் கணவில் அந்த தண்ணீர் ஏதோ ஒரு விதத்தில் வரும். யூசுப் வண்டியை பாலத்தின் மேல் இருந்து விழவைப்பதால் அடுத்த நிலை கனவில் ஆர்த்தரும் அனைவரும் ஹோட்டலில் மிதந்தபடியே இருப்பர். வேன் பல்டி அடிக்கும் போது, ஆர்த்தரின் ஹோட்டல் கனவில் அந்த ஹோட்டலே உருளும்.

* காஃபிற்கு இந்த கனவில் 'விதைப்பதில்' அனுபவம் உள்ளது. எதேச்சையாக காஃப்பும் மாலும் லிம்போவில் மாட்டிக்கொள்கிறார்கள். அதில் காஃப் சீக்கிரம் உணர்ந்து கொள்கிறான். ஆனால் மால் உணர மறுக்கிறாள். அதில் இருந்து வெளியே வருவதற்கு அவன் மாலிற்கு 'கனவில் இருக்கிறோம்' என்ற எண்ணத்தை விதைக்கிறான் (Inception). இதற்கு மாலின் totem-ஐ சுழன்றுகொண்டிருக்கும் போது அதை ஒரு சேஃப் லாக்கரில் வைத்து பூட்டிவிடுகிறான். கனவில் எதிர்பார்த்ததை போல் மால் தற்கொலை செய்துகொள்கிறாள். பின், லிம்போவில் இருந்து மீண்டும் விடுகிறார்கள். ஆனால் அவன் விதைத்த தகவல் எதிர்பாராமல் விஷ செடியாக வளர்ந்து, நிஜ வாழ்க்கையிலும் அவள் 'கனவில் இருக்கிறோம்' என்றே நினைத்துக் கொண்டு தற்கொலை செய்துகொள்கிறாள்.

* சைட்டோ Incept செய்யவேண்டும் என்று சொல்லும்போது அனைவரும் கஷ்டம் என்று கூற, காஃபுக்கு மட்டும் அது முடியும் என்று நினைக்க காரணம், அவன் ஏற்கனவே அதை மால் மூலம் நிகழ்த்தியிருப்பது தான். மால் இறக்கும் போது இவன் தப்பிக்கக்கூடாது என்பதற்காக தன் வக்கீலிடம் காஃப் அவளை கொடுமைப்படுத்துவதாகவும் கொல்லக்கூடும் என்று ஏற்கனவே சொல்லியிருப்பதால் காஃப்பால் அமெரிக்க போலீஸிடம் தப்பிக்க முடியாமல் போகிறது.

* லிம்போவில் Mal உருவாக்கிய அந்த விஷயம் தான் totem. அதை அந்த லாக்கரில் வைத்துவிடுவதால் தான் கனவா/நிஜமா என்று தெரியாமல் தற்கொலை செய்துகொள்கிறாள்.

* அரியாட்னி (Ariadne) ஒரு ஆர்கிடெக்ட். அவளுடைய வேலை, கனவுலகத்தை வடிவமைப்பது. எந்த இடமும் புதிதாக இருக்கவேண்டும். ஏற்கனவே வந்த இடம் திரும்ப வரக்கூடாது. இப்படி வந்து தொலைத்ததால் தான் சைட்டோவுடன் தோற்க நேர்ந்தது. அதில், அவன் பயன்படுத்திய அதே கார்பெட் கனவிலும் இடம் பெற்றது. கனவுலகத்தில் வடிவமைப்பு மட்டுமே அவளுடையது. அந்த கனவின் subject? காஃப்பினுடையது. சிம்பிள்.

இவள் வடிவமைப்பது நிஜத்தில் இல்லாத/இயலாத விஷயங்களை. உதா, முடிவற்ற படிக்கட்டுகள் (Penrose stairs) போன்றவை. இந்த படிக்கட்டை உபயோகித்து தான் ஹோட்டலில் ஆர்த்தர் தன்னை தாக்கவருபவனை கொல்கிறான்.

* அரியாட்னியை வேலைக்கு எடுப்பதற்கு முன், அவளை சோதிக்க, ஒரு பேப்பரை கொடுத்து ஒரு Maze வரைய சொல்கிறான். அதன் விடையை கண்டுபிடிக்க ஒரு நிமிடத்திற்கு மேல் டைம் எடுக்கும் படி (மூளைக்கு வேலை) வடிவமைக்க சொல்கிறான். அவள் இரண்டு முறை வடிவமைக்க அவன் சுலபமாக வழியை (பேனாவால் வரைந்து) கண்டுபிடித்து அவளை வெறுப்பேற்ற, அவள் பேப்பரை பிடுங்கி வட்ட வட்டமாக குருகலான வழியுடைய Maze வரைகிறாள். அதன் வழியே ஒரு நிமிடத்திற்குள்  (பேனாவால் வரைந்து) வெளியே வர முடியாது. காப் இம்ப்ரஸ் ஆகிறான்.

* இந்த படத்தில் வரும் மால் (Mal) காஃபின் குற்றவுணர்ச்சியின் வடிவம். புரிகிறதா, ஏன் ஒவ்வொரு ஆப்பரேஷனிலும் அவள் வில்லியாகிறாள் என்று?

* ஒவ்வொருவருக்கு ஏற்றவாரு கனவு நடைபெறும் இடம் மாறுபடும். யூசுப் நிறைய குடித்திருப்பதாலும், உச்சா போகாமல் விட்டதாலும் அவன் கனவு ஒரு மழை பெய்யும் உலகில். இதன் காரணமாகவே பிஸ்சரை டாக்ஸிக்காக காத்திருக்கும் இடத்தில் பிடிக்கின்றனர். ஈயம்ஸின் வேலை உருவம் மாறுவது. அதில் அவன் ஸ்பெஷலிஸ்ட். கனவில் அவன் வேறு உருவம் மாறக்கூடியவன். அவன் the mark-இடம் அவன் காட்ஃபாதர் உருவில் பேசுகிறான்.

* பொதுவாக ஒவ்வொரு நிலையிலும் சாவகாசமாக கிக் கொடுக்கலாம் தான். ஆனால், இவர்கள் 5 நிலைகள் வரை செல்வதால் அதனை தாக்கு பிடிக்க அதிகமாக மயக்க மருந்து தேவைப்படுகிறது. அதனால் லிம்போ வரை சென்றவர்கள் வெளியேற synchronised கிக் அவசியமாகிறது. அதனால் யூசுப் பாட்டு போட்டு பின் வேனை ஒரு பாலத்தின் மேல் இருந்து தண்ணீருக்குள் தள்ளுகிறான். இரண்டாம் நிலையில் ஆர்த்தர் (Arthur) அனைவரையும் லிஃப்டில் 'போட்டு' பாம் வைத்து கிக் கொடுக்கிறான். மூன்றாம் நிலையில் ஈயம்ஸ் அந்த பனிபிரதேசத்தை வெடிவைத்து தகர்த்து கிக் கொடுக்கிறான். நான்காம் நிலையில் அரியாட்னி மேலிருந்து குதித்தும், பிஸ்சரை தள்ளிவிட்டும் கிக் கொடுக்கிறாள்.
இவை நான்கு நிலை தொடர் கிக்குகளால் இவர்கள் அனைவரும் மீளுகின்றனர்.

* இந்த படத்தில் மற்றொரு சுவையான விஷயம், சார்லஸ் என்ற பெயர். இது ஒரு சங்கேத வார்த்தை. சார்லஸ் என்றால் ஒரு திட்டம். இதன்படி யாரை ஏமாற்றுகிறார்களோ அவரிடம் சென்று அவர்கள் கனவுலகில் இருப்பதாக நிரூபித்து பின் அதிலிருந்து அவர்களை மேலும் குழப்பி தங்கள் வலையில் விழ வைப்பது.

* முக்கியமா ஒன்ன மறந்திட்டேன். காஃப் தன்னிடம் உள்ள ஒரு குறையை சுயநலத்துக்காக தன் டீமிடம் சொல்லாமல் மறைத்து அவர்களை ஆபத்தில் விட்டுவிடுகிறான். அது தான் மாலின் வருகை. அதனை கண்டுபிடிக்கிறாள் அரியாட்னி. அதனால் தான் அவளுக்கும் சேர்த்து ஒரு டிக்கெட் போடப்படுகிறது. யாராவது ஒருத்தர் உண்மையை சொல்லி மற்றவர்களை காப்பாற்ற வேண்டும் இல்லையா?

Conclusion:
எத்தனையோ படங்கள் பார்த்திருந்தாலும், சில படங்கள் மட்டும் நம்மை அதிர்ச்சியிலோ/ஆச்சரியத்திலோ ஆழ்த்தும். உதா Sleuth. இப்படி கூட ஒரு படத்திற்காக 10 வருடங்கள் உழைக்க முடியுமா? அதுவும் நாம் இதுவரை கண்டிறாத உலகத்தில்? Matrix படம் கூட ஒரு வித்தியாசமான உலகம் தான். அதன் கான்சப்ட் வித்தியாசமானது தான். ஆனால் அதில் வெகு சில முடிச்சுகள் தான். மீதி கிராபிக்ஸ். மனித உடம்பு ஒரு பேட்டரி போல, நிகழ்காலத்திற்கு செல்ல டெலிபோன் தேவை...இப்படி சில விஷயங்கள் மட்டுமே. ஆனால் இந்த படத்தில் உள்ள வசனங்கள் ஒவ்வொன்றையும் 'படித்து' அறிந்தோமானால் நோலன் எவ்வளவு மெனக்கெட்டிருப்பார் என்று தெரியும். முதல் 20 நிமிட படத்தை பார்க்க நான் 2 மணிநேரம் படம் பார்த்தேன். வசனங்கள், அதன் அர்த்தங்கள் அனைத்தும் பிரமிக்க வைப்பவை.

கதை தெரியாமல் முதல் முறை பார்க்கும் போது சில காட்சிகள் அட்டகாசமாக இருந்தது. அரியாட்னியுடன் பேசும் போது நிகழும் சம்பவங்கள். அவர்கள் கடையில் உட்கார்ந்திருக்கும் போது சுற்றிலும் இருப்பவை வெடித்து சிதறும் காட்சி. அப்புறம் சில இடங்களில் அவர்கள் சொல்லித்தான் அவர்கள் கனவில் இருப்பதாக நமக்கே தெரிவது போன்றவை சின்ன சின்ன ட்விஸ்ட்டுகள்.

நிச்சயம் பாருங்கள். உங்களுக்கும் பிடிக்கும்.

Inception-ன் ஐந்து நிலைகள்
படத்தின் முடிவில் இது நிஜமா/கனவா என்று சோதிக்க காஃப் தன் டோட்டமை சுழல விடுகிறான். குழந்தைகளை பார்த்த மகிழ்ச்சியில் அதை கண்டுகொள்ளாமல் அந்த இடத்தை விட்டு சென்றுவிடுகிறான். காமெரா அந்த பம்பரத்தை நோக்கி திரும்புகிறது. அது நிஜம் என்றால் அந்த பம்பரம் விழவேண்டும். கனவு என்றால் சுற்றிக் கொண்டே இருக்கவேண்டும். பம்பரம் சுற்றிக் கொண்டிருகும் போதே படம் முடிகிறது. இப்போ சொல்லுங்கள் காஃப் நிஜ உலகில் இருக்கிறானா? கனவில் இருக்கிறானா? கனவுலகில் என்றால் இந்த படம் முழுதும் கனவா?

Bibliography:
http://screenrant.com/inception-spoilers-discussion-kofi-68330/2
http://www.cinemablend.com/new/inception-explained-unraveling-the-dream-within-the-dream-19615.html

Edith Piaf - Non, je ne regrette rien (1961) - படத்தில் கனவு முடிக்கப்பட போடப்படும் பாடல்...


8 ஆஸ்காருக்கு பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது.


Friday, May 21, 2010

சமையல் டிப்ஸ் - ஆண்களுக்காக

"உலகில் பெண்கள் 'மட்டும்' தான் சமையல் எக்ஸ்பர்டா? இது என்னடா கொடுமை"-னு மல்லாக்கப் படுத்து (சரக்கடிக்காம இருந்த போதுனு சொன்னா நம்பவா போறீங்க?) யோசிச்சு பாத்ததுல, ஆண்களும் தான் கஷ்டப்படுறாங்க. ஆனா, அவங்க ஒழுங்கா சமையல் செய்ய மாட்டாங்கனு ஒரு தாட் இருக்கு. மாத்தனும். இந்த எண்ணத்த தான் மாத்தனும்! என்ன பன்னலாம்னு யோசிச்சு பாத்தா, அட! ஆண்களுக்கும் சமையல் டிப்ஸ் கொடுக்கலாமேனு தோணிச்சு.

சென்னை தெருக்களில் இருக்கும் கையேந்தி பவன் முதல் தாஜ் ஹோட்டல் வரை சமையல் செய்வது ஆண்களே! ஆண்களே!! ஆண்களே!!! ஆனா இந்த ஒரு விஷயத்த வெச்சிகிட்டு இந்த பெண்கள் பன்னுற அலப்பரை இருக்கே...ஐயோ! ஐயோ!!

பல்வேறு காலகட்டங்களில் நான் சந்தித்த சோதனை, அதிலிருந்து மீண்டு பீனிக்ஸ் செஃப்பாக (என்னாது???) வந்த பாதைகளை மற்ற ஆண்களுடன் பகிரலாமே என்ற எண்ணம் வந்தது. அதுக்காகத்தான் இந்த ஆட்டோகிராஃப்...
 
1. போன வாரம் ஒரு நாள், டீ போடலாம்னு பால அடுப்புல வெச்சு காச்சினேன். பொங்கும் சமயம் அடுப்பை சிம்ல வெக்கிறது பழக்கம். அப்படியே வெச்சாச்சு. நாயர் கடை ஸ்டைல்ல டீ சப்பிடலாம்னு ட்ரை பன்ன இன்னொரு பக்கம் சின்ன பாத்திரத்துல தண்ணீயும் டீத்தூளும் போட்டு காய்ச்சி நல்லா கொதிக்கிற வரைக்கும் விட்டுட்டு அப்புறம் அதை எடுத்து வடிகட்டி, ஸ்ட்ராங்க் டிகாஷன் மட்டும் ஒரு டம்ளர்ல ஊத்தியாச்சு. அப்புறம் அடுப்பிலிருந்த பாலை எடுத்து ஒரு டம்ளர்ல ஊத்தி, கொஞ்சம் சக்கரை, அப்புறம் அந்த வடிகட்டின டிகாஷனையும் ஊத்தி ஒரு ஆத்து ஆத்துனா...நாயர் கடை ஸ்டைல் டீ ரெடி.

அன்னைக்கு ஏதோ கிரிக்கெட் மாட்ச். இந்த பக்கம் டீ, அப்புறம் கொஞ்சம் ஸ்நாக்ஸ், தொட்டுக்க கிரிக்கெட் மாட்ச்னு சுவாரஸ்யமாத்தான் இருந்துச்சு.

என் வீட்டுக்கு முன் இருப்பவர்கள் சில சமயம் கொசுவை விரட்ட சருகுகளையும் (அதுல சில சமயம் ப்ளாஸ்டிக் பேப்பர்களும் இருக்கும்) எரிப்பார்கள். ஒரு அரை மணிநேரம் கழிச்சு பாத்தா பயங்கர ஸ்மெல். எங்க இருந்து வருதுனு தெரியல. வெளியில போய் பார்த்தாலும் ஒன்னும் இல்ல. பின் பக்கம் சமயலரைக்கு போய் பார்த்தாலும் தெரியல. என்னடா இதுன்னு யோசிச்சு எதேச்சையா பாத்தா, மிச்சம் இருக்குற பாலில் இருந்து தான் வந்துச்சு. அடுப்பு இன்னும் சிம்-ல. டக்குன்னு கேஸை அணைச்சு (இதுவா சார் உங்க டக்கு) பாலை மூடியிருந்த தட்ட எடுத்து பாத்தா, பால் சுண்டிப்போய் அரை மணி நேரமாயிருந்தது. அப்ப இந்த அரை மணிநேரமா எரிந்திருந்தது? பால் பாத்திரத்தோடு ஒட்டி போய், பின் பால்கோவா ஆகி, பின் பல ஸ்டேஜ்களை கடந்து ஏதோ ஒரு வஸ்துவாகி போயிருந்தது. தீஞ்ச நாத்தம் தாங்க முடியல. அப்படியே தண்ணியில போட்டுட்டு வந்தாச்சு.

டிப்ஸ் 1: தேவை இல்லாத போது அடுப்பை அணைக்கவும் (ஆண்களுக்கான சமையல் டிப்ஸ் வேற எப்படித்தான் இருக்கும்???!!!)

2. வருடம் 2001. வளசரவாக்கத்துல ஒரு வீட்டை வாடகைக்கு பிடிச்சு 7 பேர் குடியிருந்தோம். வேலை தேடி அலைஞ்ச வேளை (செப். 11-க்கு பிறகு). செலவை குறைக்க வீட்டிலயே சமையல் செஞ்சுகொள்ளலாம்னு முடிவு பண்ணி அதுக்கேத்த பத்திரங்களையும் வாங்கியாச்சு. 7 பேருல ஒருத்தன் எனக்கு சமைக்க தெரியும்னு சொல்லி பொதுகுழுவ கூட்டி ஃப்ரைடு ரைஸ் செய்யலாம்னு முடிவு பண்ணியாச்சு. ஆளாளுக்கு தெரிஞ்ச வேலைய செஞ்சு அவனுக்கு உதவ, குக்கர்ல சாதம் வெச்சாச்சு.

வேலை நடந்துகிட்டிருக்குற சமயம் "டேய். இத ப்ரைடு ரைஸ்க்கு போடலாமா?"னு ஒருத்தன் கேக்க, இந்த எல்லாம் தெரிஞ்ச ஏகாம்பரம், "போடலாம். போடலாம். எல்லாம் சாப்பிடுறது தான ப்ரதர்!" அப்படீன்னு சொன்னான். அப்பவே நாங்க சுதாரிச்சிருக்கனும். மிஸ் பன்னிட்டோம்.

சாதம் வெந்து குக்கரை ஓப்பன் பன்னியாச்சு. சாதமும் நல்லா தான் வந்தது. அடுத்து அந்த ரைஸ வெச்சு ஃப்ரைடு ரைஸ் செய்யனும். அவனும் என்னன்னவோ செஞ்சு பார்த்தான். கடைசி வரைக்கும் அந்த ரைஸ், ஃப்ரைடு ரைஸ் ஆகவேயில்ல. அதனால், வெட்டி வெச்சிருந்த காய்கறியை எல்லாத்தையும் போட்டு ("எல்லாம் சாப்பிடுறது தான ப்ரதர்!") மூடிவெச்சு எடுத்து, கடைசியில அதுக்கு அவன் வெச்ச பேர் 'வெஜிடபிள் பிரியாணி'.

டிப்ஸ் 2: "சமைக்க தெரிஞ்சத விட சமாளிக்க தெரியனும்".


3. அதே வீட்டுல ஒரு முறை நாங்க வெளிய போயிருந்தோம். வீட்டிலிருந்த ஒருத்தன் சமைக்க ஆரம்பிச்சிருந்தான். செஞ்சு வெக்க சொல்லி பக்கத்துல இருந்த ஃப்ரண்டு வீட்டுக்கு போயிருந்தோம். திரும்பி வந்து (மோந்து) பாத்தா, மீன் கொழம்பு. வாசம் தூக்குது. எங்களுக்கெல்லாம் ஆனந்த கண்ணீர். மணிரத்னம் படத்துல வர்ற மாதிரி "எப்படி? எப்படி இதெல்லாம்?"னு ஒரே சென்டிமென்ட் சீன். கடைசியில பாத்தா, இவன் வெக்குற லட்சனத்த பாத்து பக்கத்து வீட்டுல இருந்த ஒரு ஆன்ட்டி அவங்க வீட்டுல இருந்து "ஒரு நாளைக்கு மட்டும்" செஞ்சு கொடுத்து அனுப்பியிருக்காங்க.

டிப்ஸ் 3: சரியா சமைக்கலைன்னாலும் அத பக்கத்து வீட்டுக்கு தெரியற மாதிரி சமைக்கனும்.

4. குக்கர்ல அரிசியை வெச்சாச்சுன்னா, நமக்கு அதை சாதமாக மாத்தித் தரக்கடவது குக்கரின் வேலை தானே? அதானே நியாயமும் கூட? ஆனா பாருங்க, ஒரு தடவை இப்படிதான் குக்கர்ல அரிசியை வெச்ச அப்புறம் கொஞ்சம் நேரம் கழிச்சு விசில் அடிச்சுகிட்டே இருந்துச்சு. 5 விசிலுக்கு அப்புறம் அணைக்கலாம்னு போனா, 'டமார்'னு ஒரு சத்தம். அப்புறம் உள்ளார இருந்த எல்லா காத்தும் 'புஸ்'ஸுனு வெளியேரிச்சு. அப்டியே ஷாக்காயிட்டேன். அப்புறம் நடந்தத ஸ்லோ மோஷன்ல ஓட்டி பார்த்த போது, குக்கரின் மூடியில் இருந்து ஒரு குட்டி ஏலியன் வஸ்து போல ஏதோ ஒன்று எகிரியது மாதிரி இருந்தது. அது ஏதோ சின்னாதா இருந்தது. அடுப்பை அணைச்சு மூடியை தொறந்து பாத்தா தான் தெரிஞ்சது...

டிப்ஸ் 4: அரிசி வெச்சாமட்டும் போதாதாம்...தண்ணியும் வெக்கனுமாம்.


5. இது ஒரு Mathematical and Technical ப்ராப்ளம்...ஒரு சமயம் மேகி (மரகதவள்ளி அல்ல) நூடுல்ஸ் செய்யலாம்னு முடிவெடுத்து(!), அதற்கான வேலைகளும் ஆரம்பிச்சாச்சு. அதுல போட்டிருந்தபடி முதலில் 225 மில்லி கொதிக்க வெச்ச தண்ணியில நூடுல்ஸை போடனுமாம். இப்ப தான் டெக்னிகல்லி ஒரு ப்ராப்ளம் வந்துச்சு. அதாவது 255 மில்லின்னா எவ்வளவுனு? புதுசா சமைக்கிறதுனால எதையும் பர்பெக்டா செய்யனும் இல்லையா? அதனால நல்லா யோசிச்சு ஒரு முடிவெடுத்தாச்சு. வீட்டுல போன வாரம் ஒரு ஃப்ரண்டு வந்திருந்தான். 'அவன்' அடிச்சு போட்ட (கண்டுக்காதீங்க) ஒரு காலி க்வாட்டர் பாட்டில் இருந்துச்சு. அது 180 மில்லி. அப்புறம் 180 / 2 = நைன்ட்டி, அதாவது 90. அப்புறம் 90 / 2 = கட்டிங் (சரி தானே!), அதாவது 45. ஸோ, ஒரு க்வாட்டரும் (180) + ஒரு கட்டிங்கும் (45) சேத்தா அது 225. இதை அளந்து பாத்தா ஒரு க்ளாஸ் 'ஃபுல்லா' வந்தது. அதுக்கப்புறம் இன்னொரு க்ளாஸ் எடுத்து அந்த அளவை மார்க் பன்னி வெச்சாச்சு.

டிப்ஸ் 5: "மேத்தமேடிக்ஸ் படிச்சா எந்த ஃபீல்டுலையும் கலக்கலாம்"னு எங்க கணக்கு வாத்தியார் சொன்னது சரிதான் போல...

டிப்ஸ் 5a: என்னதான் 225 மில்லி அளவெடுத்து வெச்சாலும், மேகி ஒழுங்கா வேகவேயில்ல. தண்ணி பத்தல. அப்புறம் தான் ஒன்னு புரிஞ்சது. அதுல போட்டிருந்தது "கொதிக்க வைக்கப்பட்ட 225 மில்லி தண்ணீரில்...". "225 மில்லி தண்ணீரை கொதிக்க வைக்கவேண்டும்"-னு போடல, இல்லையா? (லாஜிக்காமாம்...)

6. கல்யாணமான அப்புறம், வீட்டுல என் மனைவி மொத தடவையா இட்லி செஞ்சா, ம்ஹூம்...செய்ய முயற்சி பன்னினா. என்னை 'சோதனை கூடத்து' எலி ஆக்குறதுல அவளுக்கு ஒரு சந்தோஷம். உள்ள ஏதோ ஒரு வேளையா போனவ, எனக்கு ஒரு அஸைன்மென்ட் கொடுத்துட்டு போனா. அதாவது 5 விசில் அடிச்சப்புறம் நான் கேஸ் அணைக்கனும். அப்ப பாத்து ஐ.பி.எல். மேட்ச். டிவி.யில விசில் போடுன்னு தோனி சொன்னதால, விசில் மேல விசில் பறந்துகிட்டு இருந்தது. இந்த பக்கம் குக்கரிலும் விசில் மேல விசில் பறந்துகிட்டு இருந்துச்சு. கடைசியில குத்துமதிப்பா ஒரு 12 விசிலுக்கு(!) அப்புறம் நியாபகம் வந்து ஓடிப்போய் கேஸை அணைச்சு, குக்கர ஓப்பன் பன்னி பாத்தா, அட, இட்லி சுப்பரா வந்துச்சு.

டிப்ஸ் 6: Mistakes are the secret of Succeeeeeeeeeeeess.

அப்புறம், இது அவுட் ஆஃப் சிலபஸ்...

வீட்டுல ஒரு முறை வெளிய போய்ட்டு வந்தேன். வீட்டில் கண்ணாடி முன் ஒரு பேப்பரின் மேல் பாதி 5* சாக்லேட் இருந்தது. நாங்க தான் எதையும் ஃபர்பெக்டா செய்வோமே. அதனால முகமெல்லாம் அலம்பிட்டு ஃப்ரஷ்ஷா வந்து சப்டுவோம்னு போய் முகமெல்லாம் கழுவிட்டு வந்தேன். அந்த சாக்லேட்ட எடுக்கலாம்னு போனேன். என் அக்கா, "என்ன பன்னுற?"னு கேட்டா. "சாப்பிட போறேன்"னு சொன்னேன். "போய்டுவ பரவாயில்லையா?"னு கேஷுவலா கேட்டா. ஒன்னுமே புரியல. அப்புறம் தான் தெரிஞ்சது, அது 5* சாக்லேட் இல்ல, எலிய கொல்றதுக்காக வெச்சிருந்த எலி மருந்துனு. அப்பல்லாம் சாக்லேட் ஸ்டைல்ல எலி மருந்து தயாரிக்கிறது தான் பேமஸ் போல...

Sunday, May 02, 2010

சுறா - நல்ல படம்

அடிச்சு பிடிச்சு முதல் நாள் முதல் ஷோவுக்கு டிக்கெட் வாங்கி, சீட் பிடித்திட வேண்டும் என்ற 'வெறி'யுடன் உள்ளே நுழைந்து, எனக்கும் என் நண்பர்களுக்கும் சேர்த்து 8 சீட்கள் பிடித்தாகிவிட்டது. நாங்கள் இரண்டு பேர் தான் அந்த 8 சீட்டுக்கும் காவல். இவனுங்க எங்க போனானுங்க? போன் போட்டால், வெளியே தான் இருக்கிறோம். சிகெரட் வாங்கி 5 நிமிஷத்துல வந்துடுவோம்னாங்க. 15 நிமிஷம் ஆச்சு. வருபவர்களிடமெல்லாம், "ஹலோ பாஸ். ஆள் வர்றாங்க", "ஆமாமா. ஆள் வர்றாங்க" என்று சொல்லியே அலுத்துவிட்டது. எவன் வந்து சண்ட போட போறானுங்களோ.

படம் போட்டு 10 நிமிஷம் கழிச்சு வந்து தொலஞ்சானுங்க. ஒரு வழியா எல்லாரும் செட்டிலாகி, லைட்டை அனைக்க, விசில் சத்தம் காதை பிளக்கிறது. இப்படியே போனால் படம் எப்படி பாக்குறது? சரி! இதுவும் ஒரு வித்தியாசமான சூழல் தானே? விளம்பரங்களின் எண்ணிக்கை அதிகமாக அதிகமாக, சத்தமும் அதிகமாகிறது. ஆப்பரேட்டர்கள், தியேட்டர் ஓனர், அவர் குடும்பம் என்று அனைவரும் இழுக்கப்படுகின்றனர்.

சுறா - சர்டிப்பிகேட் திரையில் ஒட, அத்தனை பேரும் பரவசம் வந்தவர்களாக விசில் சத்தமும், கத்தலுமாக படத்தை வரவேற்றனர். சன் பிக்சர்ஸ் கலாநிதியின் பெயர் வந்தால், அதற்கும் விசில். ஆச்சரியமாக பார்த்துக் கொண்டிருந்தேன். அட! இவர் கூட இம்புட்டு ரீச் ஆகிட்டாரேனு. விஜய்-ன் பெயர் திரையில் வந்தது தான் தாமதம். அதற்கும் விசில் பறக்கிறது. சரியான விசிலடிச்சான் குஞ்சுகள். ஆர்ப்பாட்டமெல்லாம் அடங்கி படம் ஆரம்பமாகிறது.

யாழ்நகர்(?!) மக்களின் தலைவன் விஜய். அவர் எல்லோருக்கும் செல்லம். இன்ட்ரோவில் கடலுக்கு மீன் பிடிக்க போனவர்கள் காணாமல் போக, அனைவரும் தேடுகிறார்கள். எல்லோரும் திரும்பிவிட, விஜய் மட்டும் காணவில்லை. எல்லோரும் விஜய்யை காணாமல் தேட, அவர் மட்டும் நீச்சல் அடித்தபடி கரையை நெருங்க, ஓப்பனிங் சீன் ஆச்சே, விசில் அடிக்காமல் இருப்பானுங்களா? கற்பூரம் வேறு கொளுத்தினார்கள். நல்ல வேளை திரையை மட்டும் கொளுத்தவில்லை...ஏதோ பாட்டு ஆரம்பமிக்க போகுதுனு தெரியுது. பாட்டும் வந்தது. பாடல் வரிகளும் காதில் விழவேயில்லை. பாடல் முடிந்ததும் படம் கதை வேகம் பிடிக்கிறது.

அவர் சார்ந்திருக்கும் குப்பத்தை இடித்து விட்டு அங்கு ஒரு தீம் பார்க் கட்ட திட்டம் போடுகிறார். அந்த குப்பத்து மக்களின் ஒரே பாதுகாவலன் விஜய். இதை கேள்விப்பட்டதும் சீறுகிறார். வில்லனுக்கும் அவருக்குமான லடாய் ஆரம்பமாகிறது. இடையில் விஜய் முள்ளை முள்ளால் எடுக்க வேண்டும் என்ற வெறியுடன், எல்லா கோக்கு மாக்குகளையும் செய்கிறார். இதில் யார் வென்றார்கள் என்பதை வெண் திரையில் காண்க.

படத்தில் விஜய் அவ்வளவு அழகாக தெரிகிறார். அவர் காஸ்ட்யூம் டிசைனர் அவரது மனைவி சங்கீதா. வடிவேலுவுடன் அவர் அடிக்கும் கும்மிகள் அனைத்தும் குபீர் ரகம். போக்கிரிக்கு பிறகு இருவரும் சேர்த்து கலக்கியிருக்கிறார்கள்.

தமன்னா, சோ க்யூட். நாய் காணாமல் போனதற்காக தற்கொலை வரை செல்லும் வெகுளிப்பெண் பாத்திரம். கவர்ச்சியும் சற்று தூக்கல். இருந்தாலும் அழகு. வழக்கமான ஹீரோயின்கள் போல் இல்லாமல், படம் முழுவதும் சற்று வெயிட்டான கேரக்டருடன் வருகிறார். தமன்னாவுக்கு ரசிகர் மன்றம் வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.


பாடல்கள் சுமார் ரகம் என்றாலும் பின்னனி இசையில் பின்னி பெடலெடுக்கிறார் மணிசர்மா. வெற்றிக்கொடி, நான் நடந்தா பாடல்கள் ஓகே ரகம். தியேட்டர் அதிருகிறது. விசில் சத்தத்தில் வரிகள் கேட்கவேயில்லை.

அதிரடியான திரைக்கதை, சூடான பஞ்ச் வசனங்கள், அசத்தலான பாடல்கள், காமெடி கலாட்டா, க்யூட் தமன்னா என்று படம் போரடிக்காமல் போகிறது. கொடுத்த காசுக்கு ஒரு நல்ல என்ட்டர்டெயின்மென்ட் படம் பார்த்த திருப்தி.

சில இடங்களில் போர் அடித்தாலும், மொத்தத்தில் படம் ஓகே.

படம் முடிந்து அனைவரும் எழுந்து போகும் போது, மீண்டும் சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் வழங்கும் இசை. ஒரே கன்ப்யூஷன். திடீரென்று என்னை யாரோ தட்டி எழுப்புவது போல இருக்க கண்ணை திறந்து பார்த்தால், திரையில் படத்தின் டைட்டில் ஓடிக்கொண்டிருந்தது. படம் பார்க்க ஆயத்தமானோம்...!!!

சரி! படம் எப்படி? அதான் தலைப்பு சொல்லுதே...(தலைப்பை படிக்கும் போது சரியான மாடுலேஷனில் படிக்கவும்).


Very ஹாப்பி பர்த்டே 'தல'

பிற்சேர்க்கை - 06/May/2010


பாத்தீங்களா நான் கண்டது போலவே தினகரன் விமர்சகரும் இன்று கண்டிருக்கிறார்.

Thursday, April 29, 2010

சச்சினுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்!!!

கொஞ்சம் லேட்டான பதிவு...


சென்னை ஒரு வழியாக ஐ.பி.எல். கோப்பையை வென்றாகி விட்டது. முதல் முறை இறுதி போட்டிக்கு வந்த மும்பை, பரிதாபமாக தோற்றது. ஆனால், பரிசளிக்கும் போது சச்சின் கூறியவை தான் நெருடுகிறது. சென்னைக்கு வாழ்த்து சொல்லியவர், சைக்கிள் கேப்பில் சொன்னது, "நீங்கள் இந்த 'ஒரு' மேட்சில் எங்களை விட நன்றாக ஆடிவிட்டீர்கள்" என்று. இதில் சச்சினின் வருத்தம் கலந்த கோபம் வெளிப்படுவதாக உணருகிறேன். "கஷ்டப்பட்டு எல்லா மேட்சிலும் வென்று நாங்க பைனல் வருவோம், நீங்க நோகாம அந்த ஒரு மேட்சை ஜெயிச்சுட்டு கப் அடிச்சிடுவீங்க" என்ற தொனி. இது சச்சினிடமிருந்து வெளிப்படுவது தான் கவலை தருகிறது.

இந்த தொடரில் இந்த இரு அணிகளையும் எடை போட்டு பார்த்தால், மும்பை பல விஷயங்களில் சென்னையை ஜஸ்ட் லைக்-தட் ஓவர்டேக் செய்கிறது. காரணம், அந்த அணியின் பின்புலம் அப்படி. அணியின் ஓனர் அம்பானி. எவ்வளவு பணம் வேண்டுமானாலும் இறைக்க முடியும். திருப்பதி பாலாஜிக்கே 2 கோடி லஞ்சம் கொடுக்க கூடிய அளவு பரந்த மனது. இவர்களுடைய ஆசியால், ஒரே ஒரு மேட்சில் குறைந்த பந்தில் 50 ரண்களை எடுத்த பொல்லார்டை அதிக விலை கொடுத்து (6 கோடிகள்?) எடுத்துள்ளனர். இவர் கடைசி சில ஆட்டங்களில் சோபித்தாலும், இவரை விட குறைந்த விலைக்கு வாங்கப்பட்ட வீரர்கள் கலக்கினார்கள். பொல்லார்டுக்கு சச்சின் ரெக்கமன்டேஷன் வேறு.

மேலும் இந்த அணியில் உள்ள உலகின் ஆட்டக்காரர்கள் சில: பொல்லார்ட், ஜெயசூரியா, ப்ரேவோ, மலிங்கா, ஜான்டி ரோட்ஸ் (பீல்டிங் கோச்), பொல்லாக், ஹர்பஜன் சிங், ஜாகீர் கான், முக்கிமாக சச்சின். மும்பை அணியில் சேர்க்கபட்டவர்கள் மொத்தம் 7 கீப்பர்கள். இப்படிப்பட்ட அணியை வைத்துக் கொண்டு இவர்கள் சாதித்தது, 2008-ல் 5-வது இடமும், 2009-ல் 7-வது இடமும்.

ஆனால், சென்னை அணியை எடுத்து கொண்டால், இந்த அணியில் இருப்பது தோனி, ஹைடன், முரளி மட்டுமே. சென்னையிலோ தோனி மற்றும் பார்த்தீவ் பட்டேல் மட்டுமே கீப்பர்கள். ரெய்னா, பொல்லிங்கர், அஸ்வின் போன்றவர்கள் அணியில் சேர்க்கப்பட்ட பொழுது அவர்கள் எல்லாம் சாதாரண வீரர்கள் மட்டுமே. பிலின்டாப் விளையாடவே இல்லை.

இதில் சென்னை 2008-ல் இறுதி ஆட்டம் வரையிலும் (கடைசி பந்தில் தோற்றது), 2009-ல் அரை இறுதி வரையிலும், 2010-ல் கோப்பை. எப்படி சாத்தியம் ஆனது?

பெரிய பெரிய வீரர்களை சேர்த்தால் மட்டுமே ஒரு அணி வென்றுவிட முடியாது என்பது சச்சினுக்கு தெரியும் தான். முக்கியமாக அந்த வீரர்கள் பாஃம்மில் இருக்க வேண்டும். அதனால் தான் கடந்த 2 ஆண்டுகளும் இந்த அணி சோபிக்க வில்லை. 2008-லும், 2009-லும் கோப்பையை வென்றது யாரும் எதிர்பார்க்காத சிறிய அணிகளான ராஜஸ்தானும், ஹைதராபாத்தும். டெல்லியோ, மும்பையோ, கொல்கத்தாவோ, பெங்களூருவோ, சென்னையோ இல்லை. இந்த முறை மும்பையின் அனைத்து வீரர்களும் நல்ல பாஃம்மில் இருந்ததாலும், சில முக்கிய முடிவுகள் எடுத்ததாலும் (ஜெயசூர்யாவை சேர்க்காமல் இருந்தது) இந்த முறை வெற்றியின் விளிம்பு வரை வர முடிந்தது.

ஆனால், கடைசியில் சென்னை வென்றதற்கான காரணங்கள்:

1) 2 அரை இறுதி ஆட்டங்களும், 3-வது இடத்திற்கான ஒரு ஆட்டமும் நடந்த ஆட்டங்களின் ஸ்கோரை பார்த்தாலே தெரியும், அந்த மும்பை பிட்சின் நிலையை. 140+ எடுப்பதே கடினமாக இருந்தது. அதுவும், சென்னை 142 ரன்களை மட்டுமே எடுத்து, பின் டெக்கானை 38 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. சாதித்தவர்கள் ஸ்பின்னர்களும், ஸ்லோ பௌலர்களும். சச்சின் இதை கணிக்க தவறியது. அணியில் மாற்றம் இல்லை. வேக பந்து வீச்சாளர்களை மட்டுமே நம்பியது. அதனால் தான் கடைசி பத்து ஓவரில் 106 ரன்கள்.

2) பொல்லார்டை 3 ஓவர்கள் மட்டுமே இருக்கும் போது களமிறக்கியது. இன்னும் முன்னதாக களாமிறக்கியிருந்தால் முடிவு எப்படி வேண்டுமானாலும் மாறியிருக்கலாம். சச்சின் செய்த 2வது தவறு இது.

3) 18வது ஓவரில் 22 ரன்களை குவித்தார் பொல்லார்ட். அடுத்த ஓவரும் இதே போல் இருந்திருந்தால் சென்னை காலி. 19வது ஓவரை வீசியது ஆல்பி மார்கல். இவர் பொதுவாக ரன்களை வாரி வழங்குபவர் தான். ஆனால், இங்கே தோனியின் அறிவுரை உதவியது. பொல்லார்ட் அடித்த ரன்கள் பெரும்பாலும் மிட்-ஆன், மிட்-ஆஃப் மற்றும் மிட் விக்கெட் திசைகளில் மட்டுமே. அடிக்காத திசைகள் என்று பார்த்தால் கவர், பாயின்ட் மற்றும் பைன் லெக். பொல்லார்ட் (அஃப்ரிடி போல) 'கண்டபடி' அடித்து ஆடாதவர். அதனால் தான் தோனி, மார்கலிடம் சென்று பந்தை ஆஃப்-ஸ்டம்புக்கு வெளியே போடுமாறு கூறினார். அதனால் தான் அந்த ஓவரில் 6 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.

முதல் பந்தில் ரன் இல்லை.

இரண்டாவது ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே வீசப்பட்ட பந்தில் லாங்-ஆஃப் திசையில் ஒரு ரன்.

மூன்றாவது பந்தில் பொல்லார்ட் 4.

நான்காவது பந்தில் பொல்லார்ட் ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே ரன் இல்லை.

ஐந்தாவது பந்து 1 ரன் மற்றும் ரன் அவுட்.

ஆறாவது பந்தில் பொல்லார்ட் மிட்-ஆஃபில் அவுட்.

ஆக, 0 - 1 - 4 - 0 - W1 - W

4) இது முக்கியமானது. பொல்லார்டை வெளியேற்றிய விதம். தோனி அமைத்த பீல்டிங் வியூகம் இது வரை யாரும் முயற்சி செய்யாதது. ஹைடனை மிட்-ஆஃபிலும், ரெய்னாவை லாங் ஆஃபிலும் நிற்க வைத்தது. இருவரும் சிறந்த பீல்டர்கள். இந்த இரு இடத்தினால், பைன் லெக்கில் யாரும் இல்லை. இது கொஞ்சம் டேஞ்சரான பீல்ட் செட்டிங். (கவனிக்க. பீல்டிங்கில் ஒருவரை 30 Yard வட்டத்தில் நிற்க வைத்தால், அவர்களுக்கு பின்னால் (Deep-ல்) மற்றொரு பீல்டரை நிறுத்த மாட்டார்கள். நிறுத்துவதும் வேஸ்ட்). எதிர்பார்த்தது போலவே பொல்லார்ட் ஹைடனிடம் அவுட்டானார்.

இந்த விஷயம் தான் தோனிக்கும் சச்சினுக்குமான வித்தியாசம். இந்த வித்தியாசம் தான் சென்னை கோப்பை வெல்ல உதவியது. இது சச்சினிடம் மிஸ்ஸிங். தோனியே இதை ஒரு வித்தியாசமான முயற்சி, இந்த முயற்சி பெயிலாகியிருந்தால் அதற்கான பலனும் தான் தான் சுமக்க வேண்டியிருக்கும் என்றார்.

ஆக, சச்சினுக்கும் தோனிக்கும் இருக்கும் முக்கியமான வேறுபாடு, இந்த சின்ன விஷயம் தான். இது சச்சினுக்கு வராது. அதனால் தான், சென்னை அணியின் ஓனர்கள் முதலில் தோனிக்கு குறி வைத்தது.

சச்சின் ஒவ்வொரு உலக கோப்பையிலும் வெளுத்து வாங்குவார். ஆனால், மற்ற இந்திய வீரர்களின் ஆட்டத்தால் வெற்றி பெறமுடியாமல் போய்விடும். இதே பிரச்சினை தான் மும்பைக்கும். அதன் வெளிப்பாடு தான் சச்சினின் அந்த வாசகம்.

இதில் இன்னும் இரண்டு விஷயம்.

1) கவாஸ்கர் மும்பைகர். சச்சினின் பாதங்களுக்கு முத்தமிட விரும்பியவர். கட்டாயம் சச்சினுக்கு தான் சப்போர்ட் செய்வார். சந்தேகமில்லை. டாஸ் போடும் முன், சச்சினை ரவி சாஸ்திரி பேட்டி எடுக்க, தோனியை கவாஸ்கர் 'பார்த்து' கொண்டார். அவர் தோனியை கேட்ட கேள்வி, அவரை மனதளவில் பலவீனப்படுத்த கேட்கப் பட்ட கேள்வி. "பெரிய பைனல் இது. (இதயத்தை காட்டி) இங்கே படபடப்பும், (வயிற்றை காட்டி) இங்கே கொஞ்சம் பட்டாம்பூச்சிகளும் பறக்கவில்லையா?". இதை ஏன் கேட்டார் என்று புரியவில்லை. (பின் சச்சினிடமும் கேட்டிருக்கிறார் கவாஸ்கர். "முதல் இரண்டு செமியிலும் முதலில் பேட் செய்தவர்களே வென்றிருக்கிறார்கள்? Are you not worried?". சுட்டிக் காட்டிய ராஜாவிற்கு நன்றி).

2) வட இந்திய ஊடகங்களின் செயல்பாடு. மும்பை வென்றிருந்தால் அன்று இரவு முழுவதும் அதையே காண்பித்திருப்பார்கள். ஆனால், சென்னை வென்றதை வெறும் விளையாட்டு செய்திகளில் மட்டுமே காட்டினார்கள். அவர்களுக்கு அப்போதைய ப்ரேக்கிங் நியூஸ் 'லலித் மோடி' பற்றியது. சென்னை இந்தியாவில் இல்லை என்ற மனோபாவம் தான்.

அவர்களுக்கு + சச்சினுக்கு தோனி வைத்தது தான் ஐ.பி.எல். 2010-ன் மிகப்பெரிய ஆப்பு.

சென்னையின் ஆட்டமும், ஆட்டம் கண்ட மும்பையும்...

Wednesday, April 21, 2010

என்ன ஆச்சு சென்னை போலீஸுக்கு?

சென்னை போலீஸை பற்றி முன்பொருமுறை எழுதிய பதிவு...

போன மாதம் பாஸ்போர்ட் ரினீவலுக்கு விண்ணப்பித்திருந்தேன். அதற்கான வழிமுறைகள் தெரியவில்லை. மேலும், அலுவலுக்கு அதற்காக அரை நாள் விடுமுறை போடவேண்டியிருந்ததால், ஒரு ஏஜென்டை பிடித்தேன். அவர் கேட்டது 2000 ரூபாய். 1700 ரூபாய் ரினீவலுக்கும், இதர செலவுகளுடன் 2000 ரூபாய் வாங்கிக் கொண்டார். பிறகு அப்ளிகேஷன் பூர்த்தி செய்து கொண்டு, ஒரு சனிக்கிழமை காலை நேரில் சென்று அரை நாள் க்யூவில் நின்று ஒரு வழியாக பாஸ்போர்ட் வந்துவிட்டது. ஆனால், நான் கொடுத்தது வெறும் 1000 ரூபாய்க்கான டி.டி. அப்ப, மீதி? அது ஏஜென்ட்டுக்கு. அடங்கொய்யால...இதுக்கு நானே அந்த ஃபார்மை பூர்த்தி செஞ்சிருப்பேனே...


சரி விடுங்க. பாஸ்போர்ட் வந்த 15 நாள் கழிச்சு ஒரு ஞாயிற்றுக் கிழமையில் ஒரு (போன்) கால் வந்தது. பேசியவர் பள்ளிக்கரனை காவல்நிலையத்தில் இருந்து. வெரிப்பிகேஷனுக்காக என்று சொன்னவர், உடனே வரலாமானு கேட்டார். எனக்கோ சந்தேகம். அதான் பாஸ்போர்ட் வந்துடுச்சே, அப்புறம் ஏன் இவர் வர்றார்னு. பாஸ்போர்ட் வந்ததுக்கப்புறம் வெரிபிகேஷனானு ஒரே குழப்பம். ஒருவேளை எவனாச்சும் 'சீரியஸா' விளையாடுறானா?

"சார். எனக்கு ரினீவல் ஆன பாஸ்போர்ட் ஏற்கனவே வந்துடுச்சு. வெரிப்பிகேஷன் தேவையா?"

"சரி அப்ப. திருப்பி அனுப்பிடட்டுமா?"

"எனக்கு ப்ராஸஸ் என்னன்னு தெரியல"

"இல்லைங்க. திருப்பி அனுப்பிட்டா, உங்க பாஸ்போர்ட் கேன்சல் ஆயிடும்"ன்னார்.

அட பாவிங்களா. அப்ப வர வேண்டியது தான?

"சரி. வாங்க சார்"னு சொன்னேன். வீட்டு லேன்ட்மார்க்கெல்லாம் கேட்டுட்டு இன்னும் அரை மணி நேரத்துல வந்திடுவேன் என்றார்.

இப்ப தான் யோசிச்சேன். கையில் இருந்த காசை, காலையில் தான் கேபிள்காரர் வாங்கிட்டு போனார். சரி! ராத்திரி சாப்பிட வெளிய போகும் போது ஏ.டி.எம்.மில் பணம் எடுத்துக்கலாம்னு பர்ஸை காலியா வெச்சிருந்தேன். இப்ப, வெரிபிகேஷனுக்காக வற்றேனுட்டார். கட்டாயம் 50 இல்ல 100 எதிர்பார்ப்பார். என்ன செய்யலாம்னு யோசிச்சு, ட்ரஸ் மாத்திகிட்டு ஏ.டி.எம் சென்று பணம் எடுக்க போய் ஒரு அரை மணி நேரத்துல் திரும்பி வந்தேன்.

நான் வீட்டுக்கு வரவும், அவரும் வரவே சரியா இருந்துச்சு. மேலே வீட்டுக்கு கூட்டிட்டி போலாமானு ஒரு சந்தேகம். கரெக்டா கீழ் போர்ஷன்ல இருந்தவர் அவரை பார்த்து, "போன வாரம் நீங்க தானே, என் பேத்தியோட பாஸ்போர்ட் வெரிப்பிகேஷனுக்கு வந்தது?"னு கேட்டார். எனக்கு டவுட் க்ளியராகிடுச்சு.

சரின்னு மேலே வீட்டுக்கு கூட்டிட்டு போய், ஒரு சேர் போட்டு உக்கார வெச்சேன்.

2 பார்ம் கொடுத்து ஃபில்-அப் செய்ய சொன்னார். எனக்கு தெரிஞ்ச வரை ஃபில்-அப் செஞ்சுட்டு அவர்கிட்ட கொடுத்தேன். பின் அவர், "நீங்க பாஸ்போர்ட் அப்ளை பன்னும் போது ரெண்டு ரெஃபரன்ஸ் கொடுத்தீங்களே, அவர்களோட அட்ரஸையும் எழுதுங்க" என்றார்.

எனக்கு அதெல்லாம் நியாபகம் இல்லை. அவரே அந்த இரண்டு பேர் பெயரையும் சொல்ல, அவர்களில் ஒருவர் கீழ் போர்ஷனில் இருந்தவர். அவர் பெயரையும், மற்றொரொ போர்ஷனில் இருந்தவர் அட்ரஸையும் எழுதினேன்.

"அவங்க ரெண்டு பேர் கையெழுத்தையும் வாங்கனுமா? அவர்களில் ஒருவர் ஊரில் இல்லை".

"பரவாயில்லை. நீங்களே போட்டுடுங்க"

(ஆகா, க்ரைம் ரேட் கூடுதே...) "!!!"

எல்லா பார்மாலிட்டியும் முடிஞ்சு, ஒரு அட்ரஸ் ஃப்ரூப்பையும் கொடுத்து, கையெழுத்து + கைரேகை வெச்சு, ஃப்ராஸசை முடிச்சேன்.

அடுத்த ஸீன் என்னனு தான் எனக்கு தெரியுமே!

என்னை பார்த்து "வர்றேன் சார்" என்பார்.

"சரி" என்பேன்.

தலையை சொறிவார். சரின்னு 50 ரூபா கொடுப்பேன்.

"மத்த எடத்துல எல்லாம் 100 ரூபா தான் வாங்குவேன்" என்பார்.

சரின்னு, இன்னொரு 50 ரூபா கொடுப்பேன்.

இந்த காட்சியை தான் எதிர்பார்த்தேன்.

ஆனால், எல்லாவற்றையும் ஒழுங்கு படுத்தி அவர் எடுத்து வந்திருந்த பையில் போட்டார். போட்டுவிட்டு, என்னை பார்க்கவில்லை. (என்னை எதற்கு பார்க்கவில்லை. ஒருவேளை என்னை பார்த்தால், கண்டிப்பாக ரியாக்ஷன் கொடுப்பேன். சிரிப்பேன். 50 ரூபாய் கொடுப்பேன். அதனால், அவர் என் முகத்தை கூட பார்க்கவில்லை?).

"வரேன் சார்"னு சொல்லி கதவை நோக்கி திரும்பி அப்படியே எழுந்து வெளியே சென்றுவிட்டார். என்னப்பா ஆச்சு சென்னை போலீஸுக்கு?

நான் அப்டியே ஷாக்காயிட்டேன்...

அணிச்சை செயலாக(!), ஒரு வேளை, நாமளே தாமாக கொடுத்தால், வாங்கியிருப்பாரா தெரியாது. ஆனால், நாமே கொடுத்தால் அதுவும் தவறு தான். அதனால் நானும் கொடுக்கவில்லை.

இது ஒரு உதாரணம் என்றால், வீட்டுக்கு ஃபோன் கனெக்ஷன் கொடுக்க வந்தவர்களும் இப்படி தான். ரெண்டு பேர் வந்தார்கள். கனெக்ஷன் கொடுத்துவிட்டு எதுவும் கேட்காமலும், எதுவும் எதிர்பார்க்காமலும் சென்றனர். அன்று என் மனைவியின் பிறந்த நாள் என்பதால், வந்தவர்களுக்கு கொஞ்சம் கேக் கொடுத்தோம். அவர்களும் வாங்கிக் கொண்டு வாழ்த்தினார்கள். அதிலும் ஒருவர், கொடுக்கும் கேக்கை ஒரு பேபரில் சுத்தி கொடுக்க சொன்னார். ஆபீஸுக்கு கொண்டு சென்று அங்குள்ளவர்களிடம் பகிர்ந்து கொள்ள...

ஆனால், திருந்தாதவர்கள் கேஸ் கனெக்ஷன் கொடுக்க வந்தவர்கள். ஒரு கனெக்ஷனுக்கு 100 ரூபாய் என்று வாங்கி கொண்டு தான் விட்டார்கள்.

Thursday, March 25, 2010

Follow up: கல்யாணத்திற்கு கல்யாணம் - கத்தி முனையில்... :(

இது ஒரு மீள்பதிவு
-------------------------------
பதிவிட்ட நாள்: 11-July-2005

ஏன்? எங்கே?? எப்படி???

சில தினங்களுக்கு முன், என் ஊருக்கு (TIK திருப்பத்தூர்) சென்றிருந்தேன். ஒரு சுற்று சென்று என் நண்பர்களை காண சென்றிருந்தேன். என் நன்பனின் கடையில் அமர்ந்து போனது வந்தது பற்றி 'சாட்'டிக்கொண்டிருந்தோம். அப்பொழுது மற்றொருவன், அவன் தான் நம் கதையின் நாயகன் (Anti-hero) கல்யாணம் (எ) கல்யாணசுந்தரம், வந்து எங்கள் ஜோதியில் ஐக்கியமானான். எலி 'கெட்டுப் போன' மசால் வடையை மோப்பமிட்டுக் கொண்டு, சிங்கங்களின் குகைக்குள் வந்தது.(ஹி...ஹி...சிங்கங்கள்? நாங்கள் தான்...) உருப்படியில்லாத விடயங்கள் ஓவ்வொன்றாக பட்டியலிட்டு பேசிக்கொண்டிருந்தோம்,

அப்பொழுது தான் கதையில் ஒரு 'Hairpin Bend', அதாங்க, ஒரு அதிரடி திருப்பம். நான்காவதாக ஒருவன் வந்தான். வேறெங்கோ சென்று கொண்டிருந்தவன், கல்யாணத்துடன் நாங்கள் பேசிக்கொண்டிருப்பதை பார்த்து விட்டு, ஒரு சில வினாடிகள் தன் வாகனத்தை நிருத்திவிட்டு, "கத்தி முனையில் கல்யாணத்திற்கு கல்யாணம். தெரியுமா?" என்று சொல்லிவிட்டு சட்டென தன் 'வேலை'யை காட்டி விட்டு, சிட்டென தன் வேலையை பார்க்க சென்றுவிட்டான். அட! அவனுக்கு கல்யாணம் ஆகிவிட்டதா? அதுவும் எங்களுக்கு 'சொல்லாமலே'...சரி! ஏதாவது வில்லங்கமாயிருக்கும் என்று அவனை ஏதும் திட்டாமல் (எங்களுக்கு ரொம்ப நெருங்கின நண்பனும் இல்லை, அவனை நாங்கள் பார்த்தால் just 'hai' சொல்லும் பழக்கம் தான்), "என்னடா! என்னாச்சு!!"-ன்னு கேட்டோம். அவன் சொன்னதன் சாராம்சம் (ஆமா! அவன் கதை பெரிய இதிகாசம். இதுக்கு சாராம்சம் வேறையா?).

சுற்றிலும் உள்ள பத்து பட்டிக்கும் தலைநகரமான(?) திருப்பத்தூருக்கு அருகில் உள்ள ஒரு கிராமத்திலே ஒன்றிலிருந்து திருப்பத்தூருக்கு வரும் கல்யாணம் என்னும் இந்த கதாநாயகன் (அவனவன் கதைக்கு அவனவன் கதாநாயகன் தானே), ஒரு அன்றாடங் காய்ச்சி. சீ! சீ!! அதெல்லாம் காய்ச்ச மாட்டான். அவன் அன்று சம்பாதிப்பது அவனுக்கு உணவு, உடை, எல்லாம்னு சொல்ல வந்தேன். அவன் வாழ்விலும் தென்றல் வீச ஆரம்பித்தது. இது புயலுக்கு 'முன்னே' அமைதி. அவன் திருப்பத்தூருக்கு வரும் பேருந்தில் சக பயனியாக வரும் ஒரு கல்லூரியில் B.Com பயிலும் பெண், calm-ஆக கல்யாணத்தைப் பார்க்க, அவனுள்ளும் ஒரு 'அந்நியன்' வெளிப்பட்டுக்கிறான். அதிலிருந்து அவன் deposit இழந்தாலும், ஓட்டு சதவிகிதம் சொல்லி சப்புகொட்டும் ஒரு தேர்ந்த அரசியல்வாதியைப் போல அவளிடம் பந்தா காட்ட...அவ்வளவு தான். ஒரே மழை நீரில் இருக்கும் இரு வேறு மின் கம்பிகளும் நீரினால் ஒன்று பட்டு மின்சாரத்தை பாய்ச்சுவதைப் போல (அடங்கப்பா! என்ன உவமைடா சாமி!!), அவர்களும் அந்த காதல் என்னும் நீரில் நீச்சல் அடிக்கத் தெரியாமல் 'தொபுக்கடீர்'-னு விழுந்தார்கள். அவன் மனதில் ஒரு 'அந்நியன்'னு என்று சொன்னேன் இல்லையா? ஏன்னா, நம்ம கதாநாயகன் இந்த காதலை time pass கடலையாகவே 'பாவி'த்திருக்கிறார். இந்தக் 'ஒ(த)ருதலைக்' காதல் நாளொரு கடலையும், பொழுதொரு meeting-குமாக (decent-ஆ தான்) வளர்ந்தது.

இந்த நிலையில், அந்த பெண்ணுக்கு அவள் வீட்டில் மாப்பிள்ளை பார்க்கும் படலம் ஆரம்பித்தது. இதை அந்த பெண் எதிர்ப்பார்த்திருந்தாலும், இவ்வளவு சீக்கிரம் வரும் என்று எதிர்ப்பார்க்கவில்லை. பின் ஆப்புறம் என்ன? ஒரே திரைக்கதை தான். இவனைப் பார்க்க வேண்டும் என்று முயற்சிக்க, தலைவர் அந்த பெண்ணை பார்க்க தவிர்க்க, அந்த பெண் அவள் வீட்டில் போட்டு உடைக்க, அவள் வீட்டிலும் இதற்கு எதிர்ப்பு எழ, என்ன நிகழ்ந்திருக்கும் என்று ஊகிக்க முடிகிறதா? இவனை அவள் மிகவும் serious-ஆ காதலித்திருக்கிறாள். அதனால், தடாலடியாக, நீங்கள் ஊகித்த மாதிரியும் இல்லாமல், "பையன் தொட்டுட்டான்...பொன்னு கெட்டுட்டா"-னு ஒரு குண்டை தூக்கிப் போட்டாள். இந்த இடத்தில் நானும் என் நன்பனும், கல்யாணத்தின் நிலையை நினைத்து, 'அடிபடாமல்' விழுந்து விழுந்து சிரித்துக் கொண்டிருந்தோம்.

இந்த விவகாரம் காவல்துரை வரை சென்றது. கல்யாணம், தான் DNA சோதனை எடுக்கவும் த(஡)யார் என்று வக்கீல் மூலம் notice விட்டான். ஆனால், DNA சோதனை செய்ய சுமார் அருபதினாயிரம் ரூபாய் வரை செலவாகும் என்று தெரிந்தது. அவனால் தன்னால் அது முடியாது என்று சொல்லி கடைசியில் வேறு வழியின்றி...

சரி! தற்போது அவர்களின் வாழ்க்கை எப்படி இருக்கிறது என்று விசாரித்தோம். தன் மனைவி மேல் கோபமா இருக்கிறானா என்று கேட்டோ ம். "முதல்ல என்னை ஏமாத்திடா-ன்னு எனக்கு அவ மேல பயங்கர கோபம் இருந்துச்சு. ஆனால், என் மேல் இருந்த love-ன்னால தான் இப்படியொரு பொய் சொன்னா. அதுவும் இல்லாமல், என் மேலும் தப்பு இருந்தது. அவ என்ன serious-ஆ love பன்னியிருக்கா. நான் அவள் love-அ time paas-ஆ நினைச்சேன். அதனால, எனக்கு கிடைச்ச தண்டனை + பிராயச்சித்தம் தான்"-னு சொன்னான்.

ஆனால், அவன் தற்போது கட்டப்படுவது தங்கள் தினசரி வாழ்க்கையை நடத்துவதற்கு. தான் தினமும் சம்பாதிப்பது சாப்பாட்டிற்கே சரியாகிறது என்றும், வாழ்க்கை நடத்துவதே கடினமாக இருப்பதாகவும் சொன்னான். அவன் மனைவி தற்போது final year படிப்பதாகவும். அது முடிந்ததும் அவள் வேலைக்கு போவதாகவும் சொல்லியிருக்கிறாள். ஆனால், அவளுக்கு மேலும் B.L. படிக்க ஆசை இருப்பதால் தான் அவளை எப்படியாவது படிக்க வைக்க ஆசைப்படுவதாகவும் கூறினான். இதற்கிடையில் அவளை கட்டப்படாமல் பார்த்துக் கொள்வேன் என்றும் கூறினான். பிறகு அவனுக்கு சில அறிவுரைகள், ஆலோசனைகள், எங்களுக்கு தகுதி இருப்பதாக நினைத்துக் கொண்டு, கூறினோம்.

பிற்சேர்க்கை: 25-Mar-2010

சென்ற வாரம் மேற்கண்ட காட்சியில் இருந்த ஒருவன் எனக்கு ஃபோன் செய்து சொன்னது அதிர்ச்சியாக இருந்தது. அந்த பெண் கடந்த 6 மாதங்களுக்கு முன், 2வது பிரசவத்தில் அதிகபட்ச உதிரப் போக்கால் இறந்து விட்டாள் என்பது தான் அது. கேட்க அதிர்ச்சியாகவும், வேதனையாகவும் இருந்தது. அந்த பெண் இறந்தது ஒரு அற்ப காரணத்தான் என்னும் போது என்னவென்று சொல்வது? (மிக சமீபத்தில் தான் கல்யாணத்தின் அண்ணன் மாரடைப்பால் காலமானார். அவர் வயது 40-க்குள் தான் இருக்கும்).

Wednesday, February 17, 2010

ஆல்ஃப்ரட் ஹிட்ச்காக்

முஸ்கி: ஒவ்வொரு படமாக பார்க்க பார்க்க இந்த பதிவை அப்டேட் செய்கிறேன். ஆனால், ப்ளாக்கரில் முன்பிருந்தது போல ஒரு பழைய பதிவை எடிட் செய்ய முடியவில்லை. முன்பு Save பொத்தான் இருக்கும். ஆனால் இப்போதோ Publish Post பொத்தான் மட்டுமே இருப்பதால் ஒவ்வொரு முறை அப்டேட் செய்யும் போதும் புது இடுகை போல வந்துவிடுகிறது. ஏமாந்து வந்துவிடுபவர்கள்(!) பொருத்துக் கொள்வீர்களாக. (உங்களுக்கு சொர்க்கத்தில் ஒரு இடம் ரிசர்வ் செய்யப்பட, கடவுளிடம் ரெக்கமன்டேஷன் செய்கிறேன் ;) ).

சர் ஆல்ஃப்ரட் ஹிட்ச்காக். இந்த பெயரை பல முறை கேட்டாலும், ஏனோ அவர் படங்களை சமீப காலங்களாக பார்த்தது இல்லை. அவர் சஸ்பென்ஸ் படம் எடுப்பதில் தில்லாலங்கடி என்று கேள்விபட்டிருக்கிறேன். ஆனால், பொதுவாக எனக்கு சஸ்பென்ஸ் படங்கள் மீது எனக்கு அவ்வளவாக ஈடுபாடு கிடையாது. ஆள் "Humpty Dumpty sat on the wall" நர்சரி ரைமில் வரும் அந்த முட்டையை போல் இருப்பார்.

ஆட்ரே ஹெப்பர்ன் என்ற நடிகையை பற்றி கேள்விபட்டிருப்பீர்கள். கடந்த நூற்றாண்டின் பேரழகான நடிகை. அவர் நடித்தது என்பதற்காக Charade என்னும் படத்தை பார்க்க நேர்ந்தது. Charade படம் எனக்கு மிகவும் பிடித்து போய்விட்டதால், திரில்லர் படங்களின் மேல் எனக்கு அலாதி பிரியமே ஏற்பட்டுவிட்டது. பின் அந்த படத்தினை பற்றி கூகிளில் தேடியபோது, அந்த படத்தினை பற்றி குறிப்பிடும் பொழுது "The best Hitchcock movie that Hitchcock never made" என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

அதற்கு பிறகு, ஹிட்ச்காக் படங்கள் சிலவற்றை தரவிறக்கம் செய்து பார்த்தேன். ஒவ்வொன்றும் ஒவ்வொரு ரகம். மனிதர் நிச்சயமாகவே தில்லாலங்கடி தான்...

Strangers on a Train - 1951

சிம்பிளான கதை. அட்டகாசமான முடிச்சு. பிரபலமான டென்னிஸ் ப்ளேயருக்கு (Guy Haines), முதல் மனைவியால் பிரச்சினை. அவளை விவாகரத்து செய்துவிட்டு காதலியை திருமணம் செய்துகொள்ளலாமென்று பார்த்தால், மனைவி ஒத்துவருவதாக தெரியவில்லை. ஒரு நாள் இரயிலில் ஒரு முன்பின் பழக்கமில்லாத (Bruno Anthony) நபர் அறிமுகமாகிறார். அவருக்கு அவர் தந்தையால் பிரச்சினை. தீர்வு? ப்ரூனோ அவர் மனைவியை கொலை செய்வார், பதிலுக்கு இவர் அவருடைய தந்தையை கொலை செய்வார். சம்பந்தமே இல்லாத ஒருவரால் கொலை செய்யப்படுவதால், போலீஸிடமிருந்து எளிதில் தப்பிவிடலாம் என்பது திட்டம். ஆனால், அந்த ப்ளெயருக்கு உடன்பாடில்லை. இருந்தாலும் ப்ரூனோ அவனுக்காக அவன் மனைவியை கொலை செய்துவிடுகிறான். அடுத்து கை ஹைன்ஸ், ப்ரூனோவிற்காக தன் தந்தையையும் கொலை செய்யுமாறும், தவறினால் ஹைன்ஸ் சொல்லித்தான் அவன் மனைவியை கொலை செய்ததாக போலீஸிடம் மாடிவிட்டுவிவதாகவும் மிரட்டுகிறான். பின் அதிலிருந்து எப்படி ஹைன்ஸ் தப்பிக்கிறான் என்பது தான் கதை.



அப்புறம், நம்ம சேரன் ஒரு படம் நடிச்சாப்ல, 'முரண்'-ட்டு. இதோட காப்பிதேன் (highly inspired-ஆம்)...

(மேலே பட போஸ்டரை கவனித்தால், "L" என்ற எழுத்தை "G" அப்புறம் போட்டால் வருவது "Stranglers". இதுவும் சரியே. "Stranglers" என்றால் கழுத்தை நெறிப்பவர்கள்).


Rear Window - 1954

ஒரு அப்பார்ட்மென்ட்டில் இருக்கும் ஒரு வீடு. படம் முழுவதும் வீட்டின் அந்த அறையில் மட்டுமே நடக்கும். ஒரே அறையை மையமாக வைத்து ஒரு அருமையான திரில்லர் கதையை கொடுக்க முடியுமா? ஹிட்ச்காக்கை கேளுங்கள், Rear Window என்பார்.

வலது கால் உடைந்து கட்டு போட்டு வீல் சேரில் அமர்ந்திருக்கும் கதாநாயகன். அவனை ஒரு தலையாக காதலிக்கும் பணக்கார கதாநாயகி. தினமும் அவனுக்கு பணிவிடை செய்ய வரும் ஒரு நர்ஸ். இவர்கள் தான் பிரதான கதாபாத்திரங்கள்.

கோடை காலமாதலால் அந்த அப்பார்ட்மென்ட்டிலும் அதற்கு எதிரில் இருக்கும் இன்னொரு அப்பார்ட்மென்ட்டிலும் ஜன்னல்களை திறந்து வைக்கின்றனர் அந்த அப்பார்ட்மென்ட் வாசிகள். கால் உடைந்து கட்டு போட்டு சதா அமர்ந்திருக்கும் நிலையில், போர் அடிப்பதால் அக்கம் பக்கம் நடப்பவற்றை கவனித்துக் கொண்டிருக்கிறார் கதாநாயகன் ஜெஃப். பால்கனியில் உறங்கும் ஒரு கணவன் மனைவி மற்றும் தினமும் கூடையில் இறக்கி விடப்படும் நாய்குட்டி, தனிமையில வாடும் நடுத்தர வயதுடைய பெண்மணி, காதல் தோல்வியில் பாடல் பாடும் ஒரு பியானிஸ்ட், தினமும் பார்ட்டி கொடுக்கும் ஒரு பெண், முக்கியமாக, படுக்கையில் நோயாளியாக இருக்கும் மனைவிக்கு பணிவிடை செய்யும் ஒரு சேல்ஸ் ரெப்.



இரண்டு நாட்கள் கடும் மழை ஆதலால், அனைத்து வீட்டு ஜன்னல்களும் பூட்டப்பட, அன்று இரவு அந்த சேல்ஸ் ரெப் மட்டும் நடு இரவில், கையில் சூட்கேசுடன் சில முறை போவதும் வருவதுமாக இருக்கிறான். மழை விட்ட மறுநாள் அனைத்து வீட்டின் ஜன்னல்களும திறக்க, அந்த நோயாளி மனைவி மிஸ்ஸிங்.

இருக்கும் சின்ன சின்ன விஷயங்கள் முலம், அந்த மனைவிக்கு என்ன ஆனது என்று கண்டுபிடிப்பது கதை. இதில் முக்கியமானது அவர்களுடன் நடைபெறும் விவாதங்கள். கடைசியில் நடைபெறும் கலாட்டாவில் மற்றொரு காலையும் உடைத்துக் கொண்டு இரண்டு கால்களிலும் கட்டோடு கிடப்பார் ஜெஃப்.

North by Northwest - 1959

இந்த படத்தின் நாயகன் ரோஜர் என்பவர் George Kaplan என்று நினைத்து கடத்தப்படுகிறார். அன்று அளவுக்கு அதிகமாக மது ஊற்றி அவரை காரில் வைத்து அனுப்பி கொலை செய்ய முயற்சி செய்கின்றனர். அதில் தப்பிவிடுகிறார். போலீஸ் D&D கேஸில் கைது செய்கின்றனர். அவர் கடத்தி வைக்கப்பட்ட வீட்டில் சென்று பார்த்தால், அங்கே முன் இருந்தவர்கள் இல்லை. என்ன சொல்லியும் போலீஸ் நம்புவதாக இல்லை. பின் அந்த Kaplan யார் என்று கண்டுபிடிக்கும் முயற்சியில் மேலும் ஒரு கொலை பழியும் விழுகிறது. இரயிலில் சென்று தப்பிக்கும் போது, அதில் பயணம் செய்யும் ஈவா என்னும் பெண் ரோஜாரை காப்பாற்றுகிறாள். Kaplan அவனை மறுநாள் ஒரு இடத்தில் சந்திப்பதற்கு ஏற்பாடு செய்திருப்பதாக சொல்கிறாள். அவளை நம்பி அங்கு சென்றால், ரோஜாரை ஒரு சிறு விமானம் கொல்ல துரத்துகிறது. தப்பிக்கிறார்.



ஒரு அட்டகாசமான plot. ஒரு அட்டகாசமான டிவிஸ்ட். George Kaplan என்பது உளவுத்துறை உருவாக்கிய, யாரும் பார்த்திராத, ஒரு கற்பனை பாத்திரம். ஈவா என்னும் உளவாளியின் மேல் இருக்கும் சந்தேகத்தை திசை திருப்ப உருவாக்கப்பட்ட கற்பனை பாத்திரம் தான் George Kaplan. ஆனால், ரோஜர் செய்யும் குளறுபடியால் ஈவா உயிருக்கு ஆபத்து. அவளை காப்பாற்றினாரா ரோஜர்...?

The Birds - 1963

காக்கை, சீ கல், குருவிகள் போன்ற பறவைகள் ஆயிரக்கணக்கில் சேர்ந்து உங்களை கொல்ல முயர்சித்தால் எப்படி இருக்கும்? அதுவும் காரணமே தெரியாமல்...வார இறுதியில் Bodega Bay-க்கு மிட்ச் என்பவரின் தங்கைக்கு லவ் பேர்ட்ஸ் கொடுக்க செல்லும் மெலனி, அங்கு தங்கும் சூழ்நிலை ஏற்படுகிறது. முதலில் ஒரு சீ கல் பறவையால் தாக்குண்டு தலையில் இரத்த காயம் ஏற்படுகிறது. பின் தொடர்ச்சியாக அடுத்தடுத்து அவள் இருக்கும் இடங்களிலெல்லாம் முதலில் சீ கல் பறவைகள், பின் காக்கைகள், பின் குருவிகள் என்று தொடர்ச்சியாக தாக்குதல்கள். மிட்சின் முன்னாள் காதலியும் கொல்லப்படுகிறாள். பின் ஊரிலும் சிலர் கொல்லப்படுகிறார்கள். காரணம் தெரியவில்லை. மெலனி, மிட்ச் மற்றும் அவரின் தாயார், தங்கையுடன் ஊரை விட்டு போகிறார் என்பதுடன் படம் முடிகிறது. (இதில் அந்த பறவைகளின் தாக்குதல்களுக்கான காரணம் ஆராயப்படவில்லை).



Vertigo - 1958

இது ஒரு சைக்கலாஜிகல் திரில்லர். டிடெக்டிவ் ஸ்காட்டி ஒரு முறை ஒரு போலிஸ் அதிகாரி ஒரு மாடியின் உச்சியிலிருந்து விழுந்து இறந்ததால் அவருக்கு acrophobia என்ற உயரத்தை பார்த்தால் பயப்படும் நோய்க்கு ஆளாகிறார். அதனால் அந்த வேலையை விட்டு விலகிவிடுகிறார். பின் அவரின் நண்பருக்காக,அவர் மனைவி மெடலின் விநோத நடவடிக்கைகளால் குழப்பமுற்று, மனைவியை பின்தொடருகிறார். மெடலின் தற்கொலை முயச்சியில் இருந்து காப்பாற்றுகிறார். ஆனால் மெடலினுக்கு எதுவும் நினைவில் இல்லை (சந்திரமுகி படம் போல). பின் இருவருக்கும் இடையில் நெருக்கம் உண்டாகிறது. ஆனால், மெடலின் ஒரு சர்ச்சில் மாடிக்கு சென்று அங்கிருந்து குதித்து தற்கொலை செய்து கொள்ள ஸ்காட்டி மீண்டும் மனநோய்க்கு ஆளாகிறார்.



ஆனால், மெடலினை போன்ற முக அமைப்பு கொண்ட ஒரு பெண்ணை (ஜுடி) கண்டு அவளுடன் பழகி அவளை மெடலின் போல மாற்றி மீண்டும் அந்த தற்கொலை நாடகத்தை நடத்தி, அவளை காப்பாற்றுவது போல காப்பாற்றி அவர் தன மனநோயை குணப்படுத்த முயற்சிக்கிறார். ஆனால், அங்கே தான் இருக்கு டிவிஸ்டு.

The Lady Vanishes - 1938

ஹிட்ச்காக்கின் 'மற்றுமொரு' அட்டகாசமான படைப்பு இது.

பணிச்சரிவினால் இரயில பயணம் தாமதாம் ஆக, ஒரு இரவு அந்த பயணிகள் ஐரோப்பாவில் பன்ரிக்கா என்ற ஒரு (கற்பனை) தேசத்தில் தங்க வேண்டியிருக்கிறது. திருமணத்திற்காக ஊருக்கு திரும்பி செல்லும் ஐரிஸ், அந்த இரவில் ஒரு வயதான ஃபராய் என்ற பெண்மணியுடன் அறிமுகமாகிறார். மறுநாள் இரயில் புறப்படும் போது ஒரு கை ஐரிஸ் தலையில் ஒரு பூச்சட்டியை தள்ளி கொலை முயற்சி நடக்கிறது. அதனால் மயக்கமாகிறாள். பின் இரயிலில ஏற அங்கு அவளுக்கு உதவி செய்கிறாள் ஃபராய். இருவரும் காபி அருந்துகிறார்கள். பின் இருவரும் அன்யோன்யமாகிறார்கள். மீண்டும் மயக்கமடைந்து அதனால் சற்று நேரம் தூங்குகிறாள் ஐரிஸ். கண் முழித்து பார்க்க, எதிரில் ஃபராய் காணவில்லை. நடுவில் எந்த நிறுத்தத்திலும் வண்டி நிற்கவில்லை.


இரயிலில ஃபராய்யை பார்த்தவர்களை கேட்க, அவர்களோ யாரும் அப்படி ஒரு பெண்மணி இல்லை என்று மறுக்கிறார்கள். தலையில் அடிபட்டதால் இப்படி நினைக்க தோன்றுவதாக இரயிலில் இருக்கும் மருத்துவர் சொல்கிறார். ஆனால், அவளுக்கோ ஃபராய் ஆபத்தில் இருப்பதாக உணர்கிறாள். அவளுடன் வந்த கில்பர்ட் என்ற பயணி அவளுக்கு உதவ முன்வருகிறார். இவர் சென்ற இரவில் அவளுடன் சண்டை இட்டவர். பின் என்ன ஆனது என்பதை திரையில் காண்க.

Notorious - 1946

Charade, North by Northwest போன்ற படங்களில் நடித்த கேரி க்ரான்ட் (Cary Grant) தான் படத்தின் ஹீரோ. Casablanca புகழ் Ingrid Bergman ஹீரோயின். நாஜியின் உளவாளியின் மகளான அலீசியாவை ஜெர்மானியர்களின் கூடாரத்துக்குள் அமெரிக்க உளவாளியாக ஊடுருவ வைத்து தகவல் சேகரிக்க வைக்கின்றார் டெவ்லின் (கேரி க்ரான்ட்). இடையில் இருவருக்கும் காதல். ஆனால், கடமையின் உந்துதலால் அலீசியாவை அவள் தந்தையின் நண்பரான அலெச்ஸை திருமணம் செய்ய சொல்கிறார். பின்னர் அலெக்ஸ் கண்டிபிடித்து விட, அவர் தாயின் அறிவுரையின் பேரின் அலீசியாவுக்கு ஸ்லோ பாய்சன் கொடுக்கப்படுகிறது. அவளுக்கு இது தெரிந்தாலும், தப்பிக்க முடியவில்லை. அலெக்ஸுக்கோ இது அவனுடைய சகாக்களுக்கு தெரிந்தால் இவனை கொன்றுவிடுவார்கள்.

அலீசியா தப்பித்தாளா?



கேரி க்ரான்ட் (Cary Grant)



Shadow of the doubt - 1943

இந்த படம் ஹிட்காக்கின் ஃபேவரைட். அவர், தான் எடுத்த படங்களிலேயே சிறந்ததாக இந்த படத்தை கூறுவது உண்டு.


சான்டா ரோசா-வில் வசிக்கும் சார்லி என்னும் இளம் பெண், தன் தாய் மாமாவான சார்லியின் வருகையால் சந்தோஷம் அடைகிறாள். அவள் பெயரே, அவருடைய மாமாவின் பெயர் தான். இருவருக்கும் இடையில் டெலிபதி இயங்குவதாக அடிக்கடி சந்தோஷப்படுபவள்.

ஆனால், அவர் வரும் போது, தன்னுடனே சில பிரச்சினைகளை கொண்டு வருகிறார். அங்கிள் சார்லி, ஒரு சீரியல் கில்லர் (Merry Widow Murderer). பனக்கார விதவைகளை கொன்று கொள்ளையடிப்பது. இதை பின்னர் அறிந்து கொள்ளும் சார்லி, அங்கிள் சார்லியை கண்டுபிடிக்க வரும், டிடெக்டிவ் ஒருவருடன் சேர்ந்து, அவர் கொலையாளியாக இல்லாமல் இருக்க கூடாதா என்ற நப்பாசையுடன் சுற்றுகிறாள். இடையில் சார்லி 2 முறை கொலை செய்ய முயற்சிக்கப்படுகிறாள், அங்கிள் சார்லியால். ஆனால், போர்ட்லேன்டில் மற்றொரு கொலைகாரன் போலீஸாருடன் நடைபெறும் சன்டையில் இறந்து விடுகிறான். அவன் தான் இந்த சீரியல் கொலைகாரன் என்று கேஸை மூடிவிடுகிறார்கள்.

போட்டுக் கொண்ட ஒப்பந்தப்படி அங்கிள் சார்லி ஊரை விட்டு போகிறார். அதனால், உண்மையை தெரிந்து கொண்ட சார்லியை கொலை செய்ய முயற்சிக்கிறார் அங்கிள் சார்லி. என்ன ஆனது?

இந்த படத்தில் அங்கிள் சார்லியின் கதாபாத்திரம் புகழ் பெற்றது. அவர் ஒரு சீரியல் கில்லர் என்றாலும், படத்தில் ஒரு கொலை காட்சி கூட இல்லாமல், இப்படி ஒரு அற்புதமான திரில்லர் படம் கொடுக்க முடியுமா? முடியும். ஹிட்ச்காக்கால்...



இதெல்லாம் ஹிட்ச்சின் படங்களில் சிறந்தவவை. அவரின் படைப்புகளில் சிறந்தவை சைக்கோ மற்றும் 39 ஸ்டெப்ஸ் ஆகியவை. படம் பார்த்தால் இங்கே எழுதியிருப்பவற்றை விட செம சுவாரசியமாக இருக்கும். ஒவ்வொரு படமும் ஒவ்வொரு ரகம். சாதாரணமாக நாம் சந்திக்கும் நபர்கள். ஆனால், பிரச்சினைகள் மட்டும் வித்தியாசமானவை.

நான் பார்த்ததில் மிக சிறந்த, எனக்கு பிடித்தது Rear Window - 1954.

படம் முழுக்க ஒரே அறையில் தான் கேமரா இருக்கும். நெஞ்சில் ஓர் ஆலயம் படமாவது ஒரு வளாகத்தில் இருக்கும். ஆனால் இந்த படம் ஒரு அறை மட்டுமே. அந்த அறையை மட்டுமே மையமாக வைத்து ஒரு சுவாரசிய திரைக்கதை அமைப்பது என்பது சவாலனது.

அதுவும் க்ளைமேக்ஸில் தன் உயிரை காப்பாற்ற பயன்படுவது (அல்லது உயிர் போகும் தருனத்தை தள்ளி போடுவது), கையில் உள்ள சில ப்ளாஷ் லைட்டுகள். கதையும், அந்த துப்பறிவதும் வெறும் வசனங்கள் மூலம் தான். வசனங்களின் வழியே ஒரு க்ரைமை கண்டிபிடிப்பது என்பது ஆச்சரியமான ஒன்று.

தவறாமல் பாருங்கள் இவரின் சஸ்பென்ஸ் காவியங்களை...

பிற்சேர்க்கை - 09-May-2010

Rebecca - 1940

ரொம்ப லேட்டாக பார்த்த படம்.

சிகப்பு ரோஜாக்கள் பாணி படம். பணக்காரர் ஒருவரை ஒரு வாரத்தில் காதலித்து (இரண்டான் தாரமாக) திருமணம் செய்து கொள்ளும் பெண் (படத்தில் பெயரில்லாத பெண்), தான் கணவில் கண்ட மேண்டெர்லீ (Manderley)-க்கு போகும் சந்தோஷத்தில் இருக்க, அங்கே இருக்கும் வேலையாட்களுக்கு அவளை பிடிக்கவில்லை, முக்கியமாக முதல் தாரமான ரெபெக்காவின் maid-ஆன மிஸஸ்.டான்வர்ஸ்ஸுக்கு (Mrs. Danvers). காரணம், பொன்னியின் செல்வன் நந்தினி பாணியில் அனைவரையும் கவர்ந்த ரெபேக்கா. ரெபேக்காவின் சந்தேகத்திற்கிடமான மரணம் அந்த பணக்காரரை புரட்டி போடுகிறது.


பின்னாலில் ரெபேக்காவின் மரணம் பற்றின உண்மை தெரியவருகிறது. அதனை வைத்து ரெபேக்காவில் முன்னால் காதலன் மிரட்ட, கடைசியில் இன்னுமொரு ட்விஸ்ட்.

கதையின் டைட்டில் பாத்திரம் ரெபேக்கா என்ற பெண்ணின் முகம் ஒரு சீனில் கூட இல்லாதிருப்பது, படத்தில் ஹீரோயினுக்கு கடைசி வரை பெயர் இல்லாதிருப்பது ஆகியவை குறிப்பிடத்தக்கது. One of the 'Must Watch' movies.

பிகு: இந்த படம் சிறந்த படத்திற்கான ஆஸ்கர் விருது வாங்கியது.

Dial M for Murder - 1954

மேடை நாடகமாக வந்து பின் காவியமாகிய படம், ஹிட்ச்காக்கின் கைவரிசையால்.

மனைவி மார்கட்-ன் வற்புறுத்தலால் டென்னிஸ் விளையாடுவதை நிறுத்துகிறார் டோனி. ஆனால் அவளுக்கும், மார்க் என்ற சஸ்பென்ஸ் எழுத்தாளருடன் 'பழக்கம்' இருப்பது தெரிய வர, அவளை கொலை செய்ய திட்டமுடிகிறார். ஸ்வான் என்பவனை ப்ளாக்மெயில் செய்து மார்கட்டை கொலை செய்ய வற்புறுத்துகிறார். ஸ்வானும் வேறு வழிதெரியாமல் ஒப்புக்கொள்கிறார். ஏன் வேறு வழி தெரியவில்லை? ஒரு சிம்பிள் மிரட்டல். படத்துல பாருங்க. அதன் படி, வீட்டின் சாவியை படியில் ஒளித்து வைக்க, ஸ்வான் அதை உபயோகித்து மார்கட்டை கொல்ல வேண்டும்.



ஆனால், அந்த முயற்சியில் ஸ்வான் கொல்லப்பட, மார்கட்டுக்கு மரண தண்டனை கிடைக்கிறது. போலீஸின் சாமர்த்தியத்தாலும், சஸ்பென்ஸ் எழுத்தாளரான மார்க்கின் புத்திசாலித்தனத்தாலும் மார்கட் காப்பாற்றப்படுகிறாள். எப்படி என்பது தான் கதையே. தனக்கு தேவையே இல்லாமல், தானாக முன்வந்து இது கொலை அல்ல, தற்காப்புக்கான கொலை என்று கண்டறியும் அந்த போலீஸ்காரர், அவர்தம் கடமை என்றால் என்ன என்று நமக்கு சொல்லி நம் மனதில் நிற்கிறார்.

படத்தில் ஃபோன் ஒரு முக்கியமான கதாபாத்திரம். அதனால் தான் அந்த டைட்டில்.

To Catch a Thief - 1955

மற்றுமொரு ஹிட்ச்காக் + கேரி க்ரேன்ட் + க்ரேஸ் கெல்லி படம்.

பூனையை பழக்கி திருடும் புகழ்பெற்ற, The Cat என்ற செல்லப்பெயருடைய முன்னாள் திருடன் தான் ஜான். அவர் ஸ்டைலை பின்பற்றி சில திருட்டுக்கள் நடக்க, சந்தேகப்பார்வை அவர் மீது விழுகிறது. காவல்துரையினரிடமிருந்து தப்பித்து பழைய திருந்தி வாழும் சகாக்களிடம் செல்ல, அவர்கள் உதவ தயங்குகின்றனர்.



பின் ஒரு இன்ஸூரன்ஸ் ஏஜென்ட் ஹக்ஸன் (Dial M for Murder படத்தின் போலீஸ்காரர்) துணையோடு, சிட்டியில் உள்ள, காஸ்ட்லி நகை உடையவர்களின் லிஸ்ட் எடுத்து, அவர்களிடம் திருட வரும்போது அந்த Cat-ஐ பிடித்து, தான் நிரபராதி என்று நிரூப்பிக்கலாம் என்பது திட்டம். முடிந்ததா? முடியும். சில 'அட' திருப்பங்களோடு.

ஹக்ஸனின் நடிப்பு பிரமாதம், இந்த படத்திலும், Dial M for Murder-லும்.

Marnie - 1964

இது ஹிட்ச்காக்கின் படம் என்று தெரியாமலேயே பார்த்தது. 007 சீன் கனரி நடித்தது.

மார்னி ஆண்களை நம்பாத, இடி மின்னல், சிகப்பு நிறம் போன்றவற்றை பார்த்து பயந்தோடும் ஒரு பெண். எங்காவது வேலைக்கு சென்று, நம்பிக்கையை பெற்று பின் அங்கு திருடிவிட்டு மறுபடியும் அடுத்த இடத்திற்கு செல்லும் ஒரு பெண்.

அதை போலவே பிரின்டிங் கம்பேனி வைத்திருக்கும், மனைவியை இழந்த, மார்க் என்பவர் கம்பேனியில் மார்னி திருட அதை வைத்து தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு ப்ளாக்மெயில் செய்கிறார். திருமணமும் நடக்கிறது.



ஹனிமூனுக்கு செல்லும் போது அவளை பற்றி தெரிந்து கொள்ளும் மார்க், காரணம் தெரிந்து கொள்ள முயற்சிக்கிறார். மார்னியின் தாய் ஒரு பாலியல் தொழிலாளி. சிறுமியாக இருக்கும் போது ஒரு நாள் இடியை பார்த்து பயந்த சிறுமியை, அவள் தாயின் வாடிக்கையாளன் ஒருவன் தேற்றுவது போல் அவளை பலாத்காரம் செய்ய முயற்சிக்கிறான். அவள் தாய் பார்த்துவிட்டு அவளை காப்பாற்றும் போராட்டத்தில் அவன் அந்த சிறுமியால் கொல்லப்படுகிறான். பின் மார்னிக்கு என்ன ஆனது?

பிற்சேர்க்கை - 21-May-2010

Rope - 1948

1929-ல் வெளிவந்து பின் ஈஸ்ட்மேன் கலர் வந்ததால் மறுபடியும் ரீமேக் செய்யப்பட்ட படம் இது. இரு Gay-க்கள் தாங்கள் கொலை செய்வதில் எக்ஸ்பர்ட்களா என்று சோதனை செய்து பார்க்க (Perfect Murder), தங்கள் பள்ளி தோழனை கொலை செய்து ஒரு பெட்டியில் போட்டு, அந்த தோழனின் பெற்றோரை அழைத்து அந்த பெட்டியின் மேலேயே உணவு வைத்து பார்ட்டி கொடுக்கின்றனர். அந்த பார்ட்டிக்கு வரும் முன்னாள் ஸ்கூல் வார்டன் ஜிம்மி (எ) ஜேம்ஸ் ஸ்டீவார்ட், அங்கு நடைபெறும் சம்பாஷனைகள் மூலம், கொலைகாரனின் அதீத நம்பிக்கையும், அதனால் அவன் செய்யும் சில தேவையில்லாத செய்கைகளும் இவர்கள் செய்யும் கொலையை கண்டறிகிறார். எப்படி என்பது தான் படமே. கொலை செய்ய பயன்படும் அந்த கயிறும் ஒரு முக்கியமான கதாபாத்திரம்.

முதல் காட்சியில் கழுத்து நெறிக்கப்படும் தோழன். அங்கிருந்து படம் ஆரம்பமாகி அதே அரையில் கதை பயணிக்கிறது. நடைபெறும் வசனங்களும், அந்த இருவரில் பயந்த சுபாவம் உள்ள இன்னொருத்தனால், புத்திசாலித்தனமாக கண்டுபிடிக்கிறார் ஜிம்மி. இவரின் சில படங்களை பார்த்து, அதுவும் பல ஹிட்ச்காக் படங்களில் இவரின் நடிப்பு மற்றும் ஸ்டைலுக்காக இவரின் பரம விசிறி ஆகிவிட்டேன்.


படத்தை விடுங்கள். இதில் உள்ள சுவாரஸ்யமான விஷயங்கள்...

1. இந்த படத்தில் வரும் இரண்டு Gay-க்களில் ஒருவர் நிஜமாகவே Gay, மற்றொருவர் Bi-sexual. இந்த Bi-sexual தான் Strangers in a Train படத்தில் வரும் டென்னிஸ் வீரர் (மேலே பார்க்கவும்).

2. படத்தின் மொத்த நீளம் சுமார் 1 மணிநேரம் மற்றும் 15 நிமிடங்கள். மொத்தம் 10 பகுதிகள். மொத்த படமும் இந்த நேரத்திலே ஆரம்பித்து முடிகிறது. அதாவது படம் மொத்தம் பத்து ஷாட்கள் மட்டுமே. ஒரு ஷாட்டின் நீளம் 7 முதல் 10 நிமிடங்கள் (Long Take). இது ஒரு வித்தியாசமான முயற்சி. ஏன் ஒரு ஷாட் 10 நிமிடங்கள் மட்டுமே!? காரணம், அந்த காலத்தில் பிலிம் ரோலின் மொத்த நீளமே 10 நிமிடம் தான் ஓடும். மற்றும், ஒவ்வொரு 20 நிமிடத்திற்கும் (2 ரீல்கள்) தியேட்டர் ஆப்பரேட்டர் ரீல் மாற்ற வேண்டியிருக்கும். அதனால் மட்டுமே.

3. ஒவ்வொரு ஷாட் முடிந்து அடுத்த ஷாட் ஆரம்பிப்பது உங்களுக்கு தெரியாது. காமெரா நகர்ந்து அல்லது கதாபாத்திரம் காமெரா முன் வந்து நிற்க, திரையில் கருப்பு நிறம் படர்ந்திருக்க அடுத்த ஷாட் அங்கிருந்து ஆரம்பம் ஆகும். ஆக, படம் மொத்தமும் ஒரே ஷாட் போல தெரியும்.

4. இந்த கதை உண்மையில் 1924-ல், 7 மாதங்கள் Home work செய்து, திரைக்கதை அமைத்து நடந்த ஒரு Perfect Murder-ஐ பிண்ணனியாக கொண்ட படம். (இருவரும் பின்னர் மாட்டிக்கொண்டதால், இது ஒரு Perfect Murder இல்லை)

பிற்சேர்க்கை - 10-Dec-2010

The Man Who Knew Too Much - 1956


இது 1934-ல் வந்த படத்தின் ரீமேக். 1934-ல் எடுத்ததும் இதே ஹிட்ச்காக் தான். அப்புறம் இது எதற்கு? ஹிட்ச்காக் சொன்னது 1934 - ஒரு அமெச்சூர் எடுத்தது. 1956 - ஒரு புரொபஷனல் எடுத்ததாம்...எப்படி?

படத்தில் நம்ம தல ஜிம்மி ஒரு டாக்டர். அவர் தன் மனைவி மற்றும் ஒரு குழந்தையுடன் விடுமுறையை கழிக்க மொராக்கோ செல்கிறார். அங்கு ஒருவன் சாகும் தருவாயில் ஒரு ரகசியம் சொல்லி இறக்கிறான். பின் அவர்கள் மகனை யாரோ கடத்தி வைத்து, ஜிம்மி தனக்கு தெரிந்தது எதுவும் போலீஸுக்கு சொல்லக்கூடாது என்று மிரட்டுகின்றனர். அவன் அங்கிருந்து லன்டன் திரும்பி தன் மகனை தேடி கண்டுபிடித்து அந்த ரகசியத்தையும் காப்பாற்றுகிறானா என்பது சஸ்பென்ஸ்.

இந்த படத்தில் வரும் "Que Sera, Sera (Whatever Will Be, Will Be)" பாடல் மிகவும் புகழ் பெற்றது. ஜிம்மியின் மனைவியாக நடித்தவர் டோரிஸ் டே என்னும் அமெரிக்காவின் புகழ்பெற்ற பாடகி. அப்புறம் தமிழ் இயக்குநர்கள் ஹிட்ச்காக்கிற்கு கடமை பட்டிருக்கின்றனர். காரணம், 'குடும்ப பாட்டு' என்ற ஒன்று இந்த படத்தில் தான் ஆரம்பிக்கிறது.

இந்த பாடல் உலகப்புகழ் பெற்றதால் தான் என்னவோ, 1957-ல் வந்த தமிழ் படமான ஆரவல்லி படத்தில் ட்யூன், பாடல் வரிகள் முதற்கொண்டு Inspire ஆகியிருக்கிறார் ஜி.ராமநாதன் (இதற்கு இசை ஜி.ராமநாதனா இல்லை 'ஜெராக்ஸ் கடை ஓனர்' வேதா என்று தெரியவில்லை). இந்த update ஒரு தகவலுக்காக. ஆனால், நன்றாகவே செய்திருக்கிறார். இரண்டு பாடல்களும் இங்கே. (ஆரவல்லி என் ஃபேவரைட் க/வெ படங்களில் ஒன்று).

ஒரிஜினல்

ஜெராக்ஸ்
Torn Curtain - 1966

கமர்ஷியலா ஹிட் ஆகலைன்னு பார்க்காம விட்ட படம். படம் பார்த்ததும், நைட்டு 1 மணிக்கு இதை டைப்பிக் கொண்டிருக்கிறேன்னா படம் எப்படினு நெனச்சுக்கோங்க. இது ஹிட்ச்காக்கின் 50வது படம். சுமாராத்தான் போச்சாம்! இரண்டாம் உலகப்போருக்கு பின் இரும்புத்திரை நாடாக இருந்த ஜெர்மனியை பற்றி எள்ளலுடன் 'கிழிந்த திரை' என்று படத்தின் பெயர்.

ஹீரோ பால் நியூமேன் (Paul Newman). அவருடைய சில படங்களை பார்த்திருக்கிறேன். அவரை ரொம்ப பிடித்திருந்தது The Sting (மிஸ் பன்னக்கூடாத Gambling பற்றின படம்), The Hustler, Butch Cassidy and the Sundance Kid அவருடைய ஹிட் வரிசைகளில் சில. இந்த படத்தில் அந்த கால Tom Cruise மாதிரி இருக்கிறார்.

சரி! ஹீரோயின் அம்மனி? ஜூலி ஆன்ட்ரூஸ் (Julie Andrews) . எங்கேயோ பாத்த மாதிரி இருக்கேனு பார்த்தா, அட! நம்ம Sound of Music ஹீரோயின். அதாங்க, தமிழ்ல சாந்தி நிலையம். அப்புறம் Mary Poppins-க்கு ஆஸ்கர் வாங்கியவர்.

படத்தின் கதை? அட! அத விட்டுத்தள்ளுங்க. பால் நியூமேன்காகவும், ஜூலியன் ஆன்ட்ரூஸ்காகவும் மட்டுமே பார்க்கலாம் படத்தை.

இருந்தாலும்...அமெரிக்க அரசாங்கம் தன்னுடைய ஆராய்ச்சிக்கு பணம் ஒதுக்காத ஆத்திரத்தில் ஜெர்மனிக்கு தொழில் நுட்பத்தை அளித்து உதவ செல்லும் ஒரு விஞ்ஞானி. வருங்கால மனைவி அவனை பின் தொடர்ந்து ஜெர்மனி செல்ல, அங்கே தான் தெரிகிறது அவன் அமெரிக்க உளவாளி என்பது. அவன் அங்கு எதற்கு வந்தான்? இருவரும் இரும்புத்திரை ஜெர்மனியிலிருந்து தப்பிக்கிறார்களா? அருமையான திருப்பங்கள் நிறைந்த படம். படத்தில் கொஞ்ச நேரமே வரும் அந்த போலிஷ் பெண்மனி நம்மை நெகிழ வைக்கிறார்.

பிற்சேர்க்கை - 13-Dec-2010

The 39 Steps - 1935

ரொம்ப நாளாக பார்க்காமல் விட்ட படம். பார்க்காததற்கு காரணம், இந்த படத்தின் சப்-டைட்டில்கள் 'ஒழுங்காக' கிடைக்காததே. கடைசியில் கிடைத்ததும் அவ்வாறே. இருந்தாலும் ஒரு வழியாக 'அட்ஜஸ்ட்' செய்து பார்த்தாயிற்று. இந்த படத்தை சில முறைகள் ரீமேக் செய்தாலும், எதுவும் 1935-ல் ஹிட்ச்காக் செய்ததை போல அருமையாக வந்ததில்லை.

மிஸ்டர். மெமரி நிகழ்த்தும் ஒரு நிகழ்ச்ச்யில் பார்வையாளனாக கலந்துகொண்டு கேள்வி கேட்கிறார் ரிச்சர்ட் ஹன்னே. மிஸ்டர். மெமரி என்பவர் எந்த கேள்வி கேட்டாலும் அதற்கான விடை சொல்பவர். அங்கு ஒரு உளவாளி அனபெல்ல ஸ்மிதை சந்திக்கிறார். அந்த உளவாளியை கொல்ல இருவர் பின்தொடர, இவர் தன் வீட்டில் அடைக்கலம் கொடுக்கிறார். அன்று இரவு அந்த இருவரால் அனபெல்லா கொல்லப்பட பழி ஹன்னே மேல் விழுகிறது. சாகும் போது ஒரு மேப் கொடுத்து "அங்குள்ள ஒரு விட்டை பார்; 39 ஸ்டெப்ஸ்" என்று சில வார்த்தைகள் மட்டும் சொல்லி இறக்கிறார் அனபெல்லா. அது பிரிட்டிஷ் நாட்டின் ரகசியம் வேறு நாட்டுக்கு போகப்போகிறது என்று புரிந்து கொண்டு, சுன்டு விரலில் பாதி இழந்த ஒருத்தரை பற்றி புகார் சொல்ல அந்த மேப் காட்டும் இடத்திற்கு போகிறார். சிற்சில மற்றும் பல திருப்பங்கள் நிறைந்த படம்.

கடைசியில், முதல் காட்சியில் வந்த மிஸ்டர். மெமரியிடமே படம் முடிகிறது. அந்த ரகசியம் என்ன? மிஸ்டர். மெமரிக்கும் இதற்கும் என்ன சம்பந்தம்? அங்க தான் இருக்கு சூட்சுமம்.

ஹிட்ச்காக்கின் படங்களில் பெஸ்ட் என்று அனைவரும் சொல்லும் படம் இது.


பிற்சேர்க்கை: 31-Dec-2010

Lifeboat - 1944

இது வழக்கமான ஹிட்ச்காக் திரில்லர் இல்லை. ஆனால், இரண்டாம் உலகப்போரை மையம் கொண்டு எடுக்கப்பட்ட படம். படத்தில் மொத்தம் 10 கதாபாத்திரங்கள். படம் முழுதும் நடுகடலில் ஒரே படகில்.



ஜெர்மனியின் தாக்குதலில் கப்பலை இழந்து சுமார் 9 பேர் ஒரு சிறிய படகை அடைகின்றனர். வரும்போதே ஒரு பெண்ணும், இறந்து கொஞ்ச நேரமே ஆன ஒரு குழந்தையையும் சேர்த்து 10 பேர். அந்த பெண்ணும் குழந்தை இறந்த துக்கத்தில் அனைவரும் தூங்கும் போது தற்கொலை செய்து கொள்கிறாள். பின் ஒரு ஜெர்மனி நாஜியும் சேர்ந்துகொள்கிறான். அனைவரும் அருகில் இருக்கும் பெர்முடாவை நோக்கி பயணிக்கின்றனர். இதில் எது சரியான திசை என்பதில் குழப்பம். காரணம் காம்பஸ் இல்லை. ஒரு முடிவெடுத்து ஒரு திசையில் பயணிக்கின்றனர். செல்லும் வழியில் அந்த நாஜி அவர்கள் தவறான வழியில் செல்வதாக எச்சரிக்கை செய்து மறுதிசையில் செய்ய வைக்கிறான். யாருக்கும் எதுவும் தெரியாததால் அவன் சொல்படி கேட்கிறார்கள். நடுவில் ஒருத்தருக்கு கால் அறுவைசிகிச்சை செய்து காலை அகற்றுகிறான்.

அந்த நாஜி நல்லவனா, எல்லோரையும் எங்கு கொண்டு சேர்க்கிறார், எல்லோரும் என்ன ஆகிறார்கள் என்பது மீதி கதை. இது திரில்லர் இல்லை தான். ஆனாலும் அருமையான அனுபவம்.

வழக்கமாக எல்லா படங்களிலும் cameo appearance செய்யும் ஹிட்ச்காக் இந்த படத்தில் atmosphere artists யாரும் கிடையாததாலால் எப்படி வருவது என்று யோசித்து, கடலில் மிதக்கும் பிணமாக நடிக்கலாம் என்று நினைத்து பின் அதை மற்றொரு படத்தில் உபயோகித்துக்கொள்கிறார். இந்த படத்தில்? சற்று தான் தன் எடையை வேறு குறைத்ததால், ஒரு கதாபாத்திரம் வைத்திருக்கும் நாளிதழில், எடையை குறைக்கும் மருந்துக்கு விளம்பர மாடலாக தோன்றி அசர வைக்கிறார்.




பிற்சேர்க்கை - 04-Jan-2011


Foreign Correspondent - 1940

இரண்டாம் உலகப்போரை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இன்னொரு கதை. ஜானி என்பவரை செய்தி சேகரிக்க நியூயார்க்கிலிருந்து இங்கிலாந்து அனுப்பி வைக்கப்படுகிறார். அமைதி நடவடிக்கையில் ஈடுபடும் ஒரு குழுவில் உள்ள டச்சு அரசின் வான் மீர் என்பவரிடம் பேச்சு கொடுத்து 2ம் உலகப் போரில் இங்கிலாந்து கலந்துகொள்ளுமா என்ற உண்மையை முன்கூட்டியே அறிந்து கொள்வது தான் நோக்கம். அந்த குழுவின் தலைவர் ஃபிஸ்ஸரின் மகள் காரலை சந்திக்கிறார். ஜானியும் வான் மீரை சந்திக்கும் போது ஜானி கண் முன்னே அவர் கொல்லபடுகிறார். கொலையாளியை பின்தொடர்ந்து செல்லும் அவர் கண்டுபிடிப்பது, கொலையானது வான் மீரின் டூப்ளிகேட். ஒரு wind mill-ல் அவர் உயிருடன் கடத்திவைக்கப்பட்டிருக்கிறார். அங்கிருந்து தப்பிக்கும் அவர் போலீஸை அழைத்து வர அங்கு எதுவும் நடந்ததற்கான சுவடே இல்லை.

பின் தொடர்ச்சியாக அவர் மீது கொலை முயற்சி நடக்கிறது. இதற்கிடையில் இன்னொரு பத்திரிக்கையாளர் ffolliott உடன் இணைந்து காரலுக்கு தன் மீது இருக்கும் காதலை வைத்து அவளுக்கு தெரியாமலேயே அவளை 'கடத்தி'(!) பிஸ்ஸரை மிரட்டி வான் மீர் இருக்கும் இடத்தை பற்றின தகவலை தெரிந்துகொள்ள முயற்சிக்கின்றனர். அதுவும் முடியாமல் போகிறது. இதற்கிடையில் இதை தெரிந்து கொண்ட காரல் ஜானியை வெறுக்கிறாள்.


காதல் கைகூடியதா? வான் மீர் என்ன ஆனார்? உலகப்போரில் இங்கிலாந்து குதித்ததா(!) என்பதை 'சின்ன' வெண் திரையில் காண்க.

ஒரு காட்சியில் "HOTEL ENGLAND" என்னும் நியான் பெயர்பலகையில் ஜானி கையை வைக்க "EL" என்ற வார்த்தைகள் கொண்ட நியான்கள் ஃப்யூஸ் ஆகிறது. அந்த காட்சி "HOT ENGLAND" ஆகிறது. வான் மீர் கதாபாத்திரத்தில் நடித்த ஆல்பர்ட் இந்த படத்திற்காக ஆஸ்கருக்கு பரிந்துரைக்கபட்டவர்.

கிளைமாக்ஸ் காட்சியில் யாரும் எதிர்பார்க்காத வகையில் படமாக்கப்பட்டிருப்பது அருமை. 1940-ல் இப்படி டெக்னிகலாக அசத்தியிருப்பது அட்டகாசம்.


Spellbound - 1945

படத்தின் ஹீரோயின் Casablanca, Notorious (மேலே), அப்புறம் இந்த படத்தின் புகழ் இங்ரிட் பெர்க்மேன் (Ingrid Bergman). 3 முறை ஆஸ்கர்களை வாங்கியவர். அமெரிக்காவின் ஆல் டைம் சிறந்த நடிகைகளில் நான்காவது இடத்தை பிடித்தவர்.

ஹீரோ Roman Holiday, The Guns of Navarone, Mackenna's Gold, The Omen அப்புறம் இந்த படத்தின் புகழ் Gregory Peck. (என் வீட்டில் என் தாத்தாவின் இளமை கால b/w புகைப்படங்கள் பல இருக்கும். ஒவ்வொன்றும் ஒவ்வொரு ஸ்டைலில் எடுக்கப்பட்டிருக்கும். பிறகு தான் தெரிந்தது, இவரை பார்த்து அவர் ஸ்டைலில் என் தாத்தா தன் இளமை காலத்தில் படம் பிடித்து வைத்துக் கொண்டிருக்கிறார் என்பதையும், அவரின் மிகப்பரிய விசிறியும் என்பதை).

சில முறை ரீமேக் செய்யப்பட்ட இது ஒரு சைக்கலாஜிக்கல் திரில்லர். மனோதத்துவ நிபுணர்களை பற்றின படம். கான்ஸ்டன்ஸ் (இங்ரிட் பெர்க்மேன்) ஒரு ஒரு சைக்கோ அனலிஸ்ட். அந்த மருத்துவமனைக்கு புதிதாக ஒரு மருத்துவர், எட்வர்ட்ஸ் (Gregory Peck) வருகிறார். காரணம், தற்போதைய டைரக்டர் முர்சிஸன் நெர்வஸ் பிரச்சினையால் ரிட்டையர் ஆகிறார்.

ஆனால், இரண்டொரு நாளில் தெரிந்துவிடுகிறது வந்திருப்பவர் உண்மையான எட்வர்ட்ஸ் இல்லை என்று. அப்போ எட்வர்ட்ஸ்? அவரை கொன்று தான் அந்த இடத்தில் 'ஜான் ப்ரவுன்' என்ற இந்த எட்வர்ட்ஸ் வந்திருக்கிறார். ஜானுக்கு ஏதோ மன வியாதி என்று தெரிந்துகொள்கிறார் கான்ஸ்டன்ஸ். போலீஸிடம் மாட்டி விடுவதா இல்லை டாக்டர் என்ற முறையில் அவருக்கு சிகிச்சை செய்வதா என்று போராட்டம் கான்ஸ்டஸுக்கு. கடைச்யில் காதல் வெல்ல அவருக்கு சிகிச்சை அளித்து உண்மையை அறிந்து கொள்ள முடிவெடுக்கிறார். இதற்கிடையில் ஜானை அவருடைய mentor ப்ரூலவிடம் அழைத்து செல்கிறார். அங்கு தான் உண்மை தெரியவருகிறது. அவர் அடிக்கடி காணும் கனவுக்கும் விடை கிடைக்கிறது. எட்வர்ட்ஸ் ஒரு விபத்தில் இறக்கிறார் என்று. ஆனால், போலீஸ் ஜானை கைது செய்கிறார்கள். காரணம் அவரின் முதுகில் ஒரு துப்பாக்கி குண்டு இருந்ததால்.

ஜான் தப்பித்தானா? கொலையாளி யார்? சிம்பிளான முடிச்சின் மூலமும், சைக்கோ அனலிஸிஸ் மூலமும் கண்டுபிடிக்க முடிகிறது. சிறிய விசாரணையின் மூலம் கான்ஸ்டன்ஸ் கொலைக்கான முடிச்சை அவிழ்ப்பது அருமை.

படம் முழுவதும் கருப்பு வெள்ளையில். கடைசியில் துப்பாக்கி வெடிக்கும் போது மட்டும் ஒரே ஒரு frame மட்டும் சிகப்பு நிறத்தில். முதலில் நானும் கவனிக்கவில்லை. விக்கியில் படிக்கும் போது தான் உணர்ந்தேன். இன்னொரு முறை ஓட்டிப் பார்த்தால் தான் தெரிந்தது. இது எதற்கு? சும்மா தான்...

படத்தில் கனவை விவரிக்கும் காட்சிகளை வடிவமைத்தவர் Salvador Dalí

படத்தில் எனக்கு பிடித்த வசனம், "The human being very often doesn't want to know the truth about himself...because he thinks it will make him sick. So he makes himself sicker, trying to forget".


பிற்சேர்க்கை - 06-Jan-2011

Frenzy - 1972

இந்த படத்தை ஏன் ஹிட்ச்காக்கின் டாப் 10ல் இடம் கொடுக்கப்படவில்லை என்று தெரியவில்லை. வழக்கமாக ரகசியங்கள் மற்றும் ஒற்றர்களை பற்றி படமெடுக்கும் தலைவர், இந்த தளத்திற்கு திரும்ப வந்திருக்கிறார். இது ஒரு சீரியல் கில்லரை பற்றியது.

வழக்கமாக சில காட்சிகள் தவறாமல் ஹிட்ச்காக் படங்களில் இடம்பெறும். சம்பந்தப்படாத ஒரு அப்பாவி துரத்தபடுவது, இக்கட்டான சூழ்நிலையில் கூட்டத்தில் ஒரு சிறு கலவரம் ஏற்படுத்தி எதிரிகளிடமிருந்து தப்புவது, ஹிட்ச்காக்கின் கௌரவ தோற்றம் போன்றவை. இதிலும் அந்த அனைத்து விஷயங்களும் உண்டு.

Lifeboat படத்தில் தோன்றிய அந்த ஐடியாவை இந்த படத்தின் ட்ரைலரில் உபயோகப்பத்திக்கொண்டார் ஹிட்ச்காக். அதாவது, தேம்ஸ் நதியில் ஒதுங்கும் பிணம் போல அவருடைய cameo appearance.

திருமணமாகி பின் கஷ்டங்களை அனுபவித்து பின் விவாகரத்தான பெண்களை தேடி கற்பழித்து டையினால் கழுத்தை இறுக்கி கொலை செய்கிறான் ஒரு சீரியல் கில்லர். அவன் தான் ஹீரோ ரிச்சர்ட்டின் நண்பன் ராபர்ட். நண்பனின் முன்னாள் மனைவியை இதேபோல் கொலை செய்கிறான் ராபர்ட். அங்கு வரும் ஹீரோ ரிச்சர்ட் மாட்டுகிறான். வழக்கம் போல் போலீஸ் அவனை துரத்த, எப்படி தப்பிக்கிறான் என்பது கதை.

படத்தில் கொலையாளி யார் என்பதை விரைவிலேயே சொல்லிவிடுகிறார். இதுவும் ஒரு வகையில் நம் BP-யை ஏத்துகிறது. இந்த படத்தில் ஒரே ஒரு கொலையை மட்டும் காட்டிவிடுகிறார்கள். அது ரிச்சர்ட்டின் முன்னள் மனைவி ப்ரெண்டா. அதற்கு பின் இன்னொரு கொலையை காட்டாமலேயே மறுபடியும் நம் BP-யை ஏத்துகிறார். அவளை மாடிக்கு அழைத்து செல்வதும், பின் அவளை அவனுடன் விட்டுவிட்டு கேமரா மட்டும் பின்னோக்கி பயணிக்கிறது. நமக்கு புரிகிறது அவளும் அவ்வளவுதான் என்று.

பின் கதையின் போக்கு மிகவும் சுவாரஸ்யமானது. கண்டிப்பாக பாருங்கள்.

பிற்சேர்க்கை - 08-Feb-2011

Saboteur - 1942



விமானங்கள் உற்பத்தி செய்யும் நிறுவனத்தில் ஏற்படும் ஒரு தீ விபத்தில் தன் உயிர் நண்பனை இழக்கிறார் பேரி கேன். குற்றவாளி ப்ரை (Fry) என்னும் அதே நிறுவனத்தில் வேலை செய்கிறவர் என்கிறார் பேரி. ஆனால் அப்படி ஒரு ஊழியரே இல்லை. பழி வழக்கம் போல் இவர் மேல் விழுகிறது. உண்மையான குற்றவாளியை தேடி பயணப்படுகிறார், வழியில் சந்திக்கும் ஒரு பார்வையற்றவரின் உறவினரான ஹீரோயினுடன். (இவரை பற்றி ஒரு 'அட!' குறிப்பு கீழே)

எங்கெங்கோ சென்று பின் அந்த கொலையின் பின்னனியில் இருக்கும் மிகப்பெரிய திட்டங்களையும் அதன் பின்னனியில் இருக்கும் சமுதாயத்தின் மேன்மக்கள் போர்வையில் ஒளிந்திருக்கும் கூட்டத்தையும் எப்படி கண்டுபிடிக்கிறார் என்பது நல்ல திரிலருக்கான கதை.

இப்போ அந்த பார்வையற்றவர். இவருடைய காதாபாத்திர அமைப்பு ஒரு பிரபலமான திரைப்படத்தில் நம் இயக்குநர் சிகரம் "inspire" ஆகியிருக்கிறார். அது தான் நன் மேஜர் சுந்தரராஜனுக்கு 'மேஜர்' பட்டம் கொடுத்த கதாபாத்திரம். ஆம்! மேஜர் சந்திரகாந்த் கதாபாத்திரம் தான்.ஆனால், நம்ம கே. பாலசந்தர் இந்த கேரக்டரை அப்படியே காப்பி அடித்திருக்கிறார். நிச்சயம் இதை காபி என்று சொல்ல முடியாது (அல்லது, KB மீதுள்ள அபிமானத்தால் அப்படி சொல்ல மனம் வரவில்லை). படத்தில் இது ஒரு சிறு கதாபாத்திரமே. 5 நிமிடங்கள் கூட படத்தில் வருவதில்லை. மேஜர் சந்திரகாந்த் படத்திலோ KB இந்த கதாபாத்திரத்தின் பில்டிங்கை ஸ்ட்ராங்காக்கியிருக்கிறார்.


Topaz - 1969

'தோழர்'கள் பார்க்க வேண்டிய படமிது. தோழர்களுக்கானது இல்லையென்றாலும், ஃபிடல் கேஸ்ட்ரோவும் சே-குவேராவும் படத்தில் (நிஜமாகவே) வருகிறார்கள்.


அந்த காலத்தில் ஓடாத படம் இது. காரணம், ஹிட்ச்காக்கின் ஃபேவரைட் ஹாலிவுட் நடிகர்களான Ingrid BergmanCary Grant போன்றோர் இல்லாத ஹாலிவுட் படம் என்பதால். இது அமெரிக்க - ரஷ்யா இடையிலான பனிப்போரை மையமாக வந்த படம்.




பனிப்போர் சமயத்தில் ரஷ்யாவில் இருந்து அதன் உளவுத்துறையின் முக்கியமான தலைவர் ஒருவர் அடைக்கலம் தேடி அமெரிக்கா வருகிறார். அவரை காப்பாற்றிய அமெரிக்க உளவுத்துறை அவரை வைத்து ரஷ்யாவின் முக்கியமான ராணுவ ரகசியங்களை, அமெரிக்காவின் எதிரி நாடான கியூபாவில் ரகசியமாக ராணுவ தளம் அமைக்கப்படுவதை தெரிந்து கொள்கிறார்கள். அதை பற்றி துப்பறிய ஒரு பிரஞ்சுக்காரரான Andre-வை அனுகுகிறார்கள். மேலும் அமெரிக்காவில் இருக்கும் கியூபாவின் தூதரகத்தில் நுழைந்து சில முக்கியமான ஆவனங்களை ஆள் வைத்து ஃபோட்டோ எடுத்துக்கொள்கிறார் அந்த ஆள். பின் க்யூபா செல்லும் அவர் தன் முன்னாள் காதலியான Juanita-வை சந்திக்கிறார். அவர் க்யூபாவில் ரஷ்யா நுழைந்ததை விரும்பாமல் அவர்களுக்கு எதிராக Andre-க்கு உதவுகிறார். பின் அந்த ரகசியங்கள் உண்மைதானா என்று கண்டறிகிறார் Andre. Juanita & கோ கொல்லப்படுகிறார்கள்.

அப்ப Topaz என்பது என்ன? அது பிரஞ்சு ராணுவத்தின் தலைமைப்பொருப்பில் இருக்கும் ரஷ்யாவின் ப்ரெஞ்சு உளவாளிகளின் கூட்டமைப்பு. அந்த கூட்டத்தில் ஒருவரை அமெரிக்க உளவு அமைப்பு கண்டுபிடிக்க அவரை வைத்து அனைவரையும் கண்டுபிடிப்பது கதை.

அட! கதையை விடுங்க பாஸ். அது கிடக்குது. பனிப்போர் காலத்தில் க்யூபா எப்படிருக்கும்? ஃபிடல் மற்றும் சே மாதிரியே எல்லோரும் உடையனிந்து தாடி வைத்து...சில காட்சிகளில் ஃபிடல் கேஸ்ட்ரோவும் சே-குவேராவும் சில காட்சிகளில் வருகிறர்கள். நடிக்கவில்லை. உண்மையாக நடந்த ராணுவ அணிவகுப்பில் Andre-வை வைத்து படமெடுத்து உபயோகப்படுத்தியிருக்கிறார்கள்.

அப்புறம் இந்த படம் உண்மையான சம்பவத்தை அடிப்படையாக கொண்டது. Juanita என்னும் பாத்திரம், ஃபிடல் கேஸ்ட்ரோவின்  மகள் Alina Fernández-வை மையமாக வைத்து எடுக்கப்பட்டது. Alina Fernándezஃ பின்னாளில் க்யூபாவில் இருந்து 'தப்பித்து' அமெரிக்காவுக்கு வந்து அடைக்கலம் ஆனவர். ஹீரோ André, அப்புறம் அந்த ரஷ்ய உளவுத்துறையின் முக்கியமான தலைவர், Hernandez ஆகியோர் உண்மையான கதாபாத்திரங்களை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டது.

பிற்சேர்க்கை: 04-July-2013

Psycho - 1960

ஹி ஹி...வழக்கம் போல் ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப லேட்டாக பார்த்த படம். காரணம், நேற்று தான் சப் டைட்டில் கிடைத்தது.



ஒரு பெண் தன் முதலாளியிடமிருந்து 40,000$ திருடிக்கொண்டு ஊரை விட்டு ஓடுகிறாள். ஒரு மோட்டலில் இரவு தங்கும் போது அங்கே மோட்டல் நடத்துபவரின் தாயால் கொல்லப்படுகிறாள். மகன் தடயத்தை அழிக்கிறான். அந்த 40,000 தேடி ஒரு டிடெக்டிவ் வர, அவரும் கொல்லப்பட்டுகிறார்.

பின் கொல்லப்பட்டவளின் காதலனும், அவளின் தங்கையும் அந்த மோட்டலுக்கு வருகிறார்கள், கண்டுபிடிக்க. அங்கே களேபரங்கள்.

படத்தை பாருங்கள், ஏன் இதை ஹிட்ச்காக்கோட மாஸ்டர் பீஸ்னு சொல்றாங்கனு தெரியும்...

ஷவரில் கொல்லப்பட்டும் சீன் உலகப்பிரசித்தி பெற்றது. அதனால், சொல்லத்தேவையில்லை. எனக்கு ரொம்ப பிடித்தது அந்த மகனின் அசால்டான நடிப்பு மற்றும் கடைசி சீனில் அவன் 'அம்மா' தான் கொலைகாரி இல்லை என்று சொல்ல ஆசைப்படும் இடம். அது தான் டைரக்டோரியல் டச்.

பாலுமகேந்திராவே சொன்னது: இந்த படத்தில் இம்பிரஸ் ஆகி எடுத்தது தான் 'மூடுபணி'.

'வாலி' படத்தில் ஃபைனல் டச்சும் இந்த பைனல் டச்சும் ஒத்துப்போகிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்...

பிற்சேர்க்கை: 05-Dec-2015



Stage Fright (1950 film)

ரொம்ப கேள்விப்படாத படம். தன் காதலனுக்காக அவன் (தன் 'கள்ளக்'காதலுக்காக) செய்யாத கொலைக்காக பழி ஏற்று துரத்தப்படும், ஹிட்ச்காக்கின் டெம்ப்ளேட் படம். ஈவா தான் அந்த காதலி. அவள் காதலனின் காதலி Marlene Dietrich. இவர் Witness for the Prosecution-ல் நடித்தவர். செமத்தியான நடிகை போல.

கடைசி 10 நிமிடங்கள் ரத்தத்தை பம்ப் செய்யும் அனைத்து வேலைகளையும் கச்சிதமாக செய்கிறார் ஹிட்ச்காக், தன் வழக்கமான ட்விஸ்ட்டுடன். ஈவா-க்கு உதவுவது அவர் தோழரான தந்தை.



'சர்' ஹிட்ச்காக் ஏன் போற்றப்படுகிறார்?

ஹிட்ச்காக்கின் படங்களை வெறும் பொழுது போக்கிற்காகவோ அல்லது திரில்லருக்காகவோ மட்டும் அவரை எல்லோரும் பாராட்டுவது இல்லை. அவருடைய உழைப்பும், டெடிகேஷனும் அபாரமானவை. மேலும் டெக்னிகல் அம்சங்களை பார்த்தால் அந்த காலத்திலேயே இப்படியா என்று கேட்கத்தோன்றும்.

உதாரணங்கள் சில.

* இவருடைய படங்களின் முடிச்சுகள் காலத்தை மீறியவையாக இருக்கும். யாரும் தொடாத சப்ஜெக்ட் இருக்கும். Marnie படத்தில் அந்த காலகட்டத்தில் சொற்பமாக இருந்த குழந்தைகள் மீதான பாலியல் கொடுமையை தொட்டிருப்பார். Spellbound-ல் மனநிலை பாதிக்கப்பட்டவர்களை பற்றின கதை, Vertigo-வில் உயரத்தை பார்த்தால் பயப்படும் மனநிலை பாதிக்கப்பட்ட கதாபாத்திரங்கள், உளவுத்துறையினை மையமாக வைத்து எடுக்கப்பட்ட கதைகள், இல்லாத ஆளை தேடி கண்டுபிடிப்பது போன்ற கதைகள் போன்றவை.

* படத்தின் காட்சியில் வைக்கப்படும் கேமரா கோனங்களில் கூட அசத்தியிருப்பார். The Lady Vanishes-ல் முதல் காட்சியில் ஒரு செட் போடப்பட்டு தூரத்தில் இருந்து காட்சி ஜூம் ஆகி, பின் அந்த ஹோட்டலின் அருகில் வரும்போது உள்ளே சில ஆட்கள் நடமாட்டம் தெரியும். செட்டில் இருந்து நிஜத்திற்கு எப்படி மாறியது? இதை போன்று பல படங்களில் கேமரா கோணம் புத்திசாலித்தனமாக வைக்கப்பட்டிருக்கும். சில கோணங்களை புதுமையாக இவரே உருவாக்கியிருப்பார்.

* சில வித்தியாசமான உத்திகளை உபயோகபடுத்தியிருப்பார் ஹிட்ச்காக். Rebecca-வில் படத்தின் டைட்டிலானா Rebecca என்னும் காதாபாத்திரத்தை கடைசி வரை படத்தில் காட்டியிருக்க மாட்டார். அதே படத்தில் ஹீரோயினுக்கு பெயரே இல்லை.

* Rope படம் மொத்தமும் பத்தே ஷாட்கள். ஒவ்வொரு ஷாட்டும் அதிகபட்சம் 10 நிமிடங்கள். காரணம், அந்த காலத்தில் பிலிம் ரோலின் மொத்த நீளமே 10 நிமிடம் தான் ஓடும்.

* Shadow of the doubt-ல் ஹீரோ ஒரு சீலியல் கில்லர். ஆனால் படம் முழுவது ஒரு கொலை காட்சி கூட இருக்காது. ஆனாலும் படம் பயங்கர திரில்லாக இருக்கும்.

* Rear Window-ல் படம் முழுவதும் ஒரு அறையில் மட்டுமே படம் பிடிக்கப்பட்டிருக்கும். ஒரு மேடை நாடகத்தில் கூட 2 அல்லது 3 லொக்கேஷன்கள் இருக்கும். ஆனால், இதில் ஒரே அறை மட்டுமே.

* Lifeboat படம் முழுக்க ஒரு படகில். அதிலும் கூட தன் கேமியோவை செய்திருப்பார்(!).

* Foreign Correspondent-ல் வரும் அந்த க்ளைமேக்ஸ்.

* Spellbound-ல் படம் முழுவதும் கருப்பு வெள்ளையில். கடைசியில் துப்பாக்கி வெடிக்கும் போது மட்டும் ஒரே ஒரு frame மட்டும் சிகப்பு நிறத்தில். அதுவும் frame மட்டுமே, சீன் இல்லை. இது கையால் வரையபட்டது.

* The Birds-ல் அந்த பறவைகளின் தாக்குதல்களுக்கான காரணம் கடைசி வரை ஆராயப்படவில்லை. அது தேவைப்படவும் இல்லை.

* நம்ம தமிழ் படங்களில் அதன் க்ளைமேக்ஸ் காட்சிக்காக பார்வயாளர்களை இயக்குநர்கள் தயார்படுத்துவார்கள். ஆனால் இவர் படங்களின் பார்த்துக் கொண்டிருக்கும் போதே க்ளைமேக்ஸ் வந்திடும். கடைசி 3-4 நிமிடங்களில் சஸ்பென்ஸின் எல்லா முடிச்சுகளும் அவிழ்க்கப்பட்டு End Card போட்டு எகத்தாளம் பன்னுவார்.

* இவர் தொழில்நுட்பம் அவ்வளவாக இல்லாத காலகட்டத்தில் இவர் படமாக்கும் உத்திகள் ஆச்சரியம் அளிக்கவல்லவை. சில சமயம் தொழில் நுட்பம் இவரிடம் தோற்றுவிடும். உதா, பிலிம் ரோலின் மொத்த நீளமே 10 நிமிடம் தான் என்னும் காரணத்தால் Rope படத்தை பத்து ஷாட்களாக எடுக்க வேண்டியாதக ஆகிவிட்டது. இல்லைன்னா ஒரே ஷாட்டில் எடுத்திருந்தாலும் எடுத்திருப்பார். இந்த படத்தில் கேமரா அங்கும் இங்கும் நகர, அந்த படத்தில் இடம் பெரும் கட்டிடங்களின் சுவர்களை நகர்த்தி, பின் கேமரா கடந்ததும், மீண்டும் சுவரை பழைய இடத்தில் கொண்டு வந்து வைப்பார்களாம்.

* Shadow of the doubt-ல் அந்த கதாபாத்திரம் இரயிலில் இருந்து வெளியே விழ, எதிரில் மற்றொரு இரயில் அவரை ஏற்றுவது போல் எடுக்கப்பட்ட காட்சி பிரசித்தி பெற்றது.

* Saboteur-ல் சுதந்திர தேவியில் கையில் இருந்து கீழே விழுவது போல எடுக்கபட்டிருக்கும் காட்சி சில உத்திகளை கையாண்டு எடுக்கப்பட்டது (Dolly zoom கீழே).

* North by Northwest-ல் கதாநாயகனை கொல்ல ஒரு சிறிய விமானம் துரத்துவது. சுலபமாக தப்பிக்க முடியும் என்று நாம் நினைப்போம். ஆனால், ஆளே இல்லாத மிகப்பெரிய காலி மைதானத்தில் ஒரு விமானம் துரத்துகிறது. அந்த விமானியிடம் ஒரு துப்பாக்கி. எப்படி தப்பிப்பார்?

* இவருடைய Technical Skills மிகச்சிறந்த உதாரணம் The Birds திரைப்படம். படம் பார்த்தவர்கள் வாய் பிளப்பது இதை எப்படி சாத்தியப்படுத்தியிருப்பார் ஹிட்ச்காக் என்பது தான். எடுக்கப்பட்டது 1963-ல். ஆயிரக்கணக்கான காக்கைகள், சீகல்கள், குருவிகள் ஆகியவை படத்தில் இருக்கிறது. எப்படி சேர்த்திருப்பார்? இது ஒரு கணம் நம்மை ஏமாற்றும் magician-ன் உத்தி தான். படத்தில் ஆயிரக்கனக்கில் புறாக்கள் இருந்தாலும், அவறை காட்டும் போது சில புறாக்கள் மட்டுமே உண்மை, அசையும். மற்றவை பொம்மைகள். அந்த பொம்மைகளுக்கு நடுவே நிஜ புறாக்களை வைத்து படமாக்கியிருப்பார். காக்கைகள் தாக்கும் போது, சில அட்டை காக்கைகளை உபயோகப்படுத்தியிருப்பார். இது படம் பார்க்கும் நமக்கு தெரிய வாய்ப்பில்லை.

* Saboteur படத்தின் க்ளைமேக்ஸ் நடைபெறுவது அமெரிக்காவின் பிரபலமான சுதந்திர தேவியின் சிலையின் உள்ளே. தொழில்நுட்பம் அவ்வளவாக இல்லாத காலகட்டத்தில் எப்படியெல்லாம் கஷ்டப்பட்டு டெடிகேஷனுடன் இதையெல்லாம் சாத்தியப்படுத்தியிருக்கிறார்கள் ஹிட்ச்காக் & டீம் என்பது ஆச்சரியம் தான்.

* Dolly zoom என்னும் உத்தியை பிரபலப்படுத்தியவரே இவர் தான். Dolly zoom என்பது ஒருவர் மேலே இருந்து கீழே விழுவது போன்ற காட்சிகளில் நமக்கு அது உண்மை போன்ற தோற்றத்தை கொடுப்பது. அதாவது ஒரு பொருள் நம்மை விட்டு விலகும் போது அதன் அளவு சிறிதாகும். நம்மை நோக்கி வரும் போது பெரிதாகும். அப்படி நம்மை விட்டு விலகும் போது, அதன் அளவு சிறிதாகும் போது கேமராவின் லென்ஸை தேவைகேற்றார் போல் ஜூம் செய்தாக், அந்த பொருள் நம்மை விட்டு விலகினாலும் அதன் அளவு அப்படியே இருக்கும். இந்த Dolly zoom-ஐ இப்படியும் கூறுவர், The "Hitchcock zoom" or the "Vertigo effect" or "Hitchcock shot" or "Vertigo shot".

ஹிட்ச்காக்கின் டெம்ப்ளேட்

இவர் வழக்கமாக சில டெம்ப்ளேட் வைத்திருப்பார். அவற்றில் சில.

* இவர் எல்லா படங்களிலும் சில ப்ரேம்கள் தோன்றிவிடுவார். நம்ம பேரரசு போல பஞ்ச் எல்லாம் பேசுவதை போல நிமிடங்களில் அல்ல. வினாடிகள். கும்பலோடு கும்பலாக, ஆனால், தனித்து தெரியும் படி சில frame-கள். Frenzy படத்தின் ட்ரைலரில் இவர் தேம்ஸ் நதிக்கரையில் மிதக்கும் பிணமாக, இதே 'படத்தில்' கும்பலோடு நின்றிருப்பவராக, Dial M for Murder-ல் பள்ளிகூட புகைப்படத்தில் ஓரமாக, North by Northwest-ல் பேருந்தை தவற விடுபவராக, Shadow of a Doubt-ல் அவர் சீட்டு ஆடிக்கொண்டிருப்பவராக அவர் கை மட்டும் தெரியும். Topaz-ல் வீல் சேரில் உட்கார்ந்திருப்பவராக, Torn Curtain-ல் (நுனுக்கமாக) குழந்தையை ஒரு மடியில் இருந்து மற்றொரு மடிக்கு மாற்றுவார். To Catch a Thief-ல் பேருந்தில் கேரி க்ரான்ட்டின் பக்கத்து சீட்டில் உட்கார அவர் "மறுபடியும் இவரா?" என்பது போல் பார்ப்பார்.
அவனா நீயி!?
* இந்த கேமியொக்களில் டாப் க்ளாஸ், Lifeboat படம் தான். படத்தில் 8-9 கதாபாத்திரங்கள். படம் முழுவதும் ஒரே படகில் மட்டுமே. இதின் எங்கிருந்து ஹிட்ச்காக் வருவார்? வருகிறாரே...ஒருத்தர் பழைய நாளிதழை புரட்ட, அங்கு ஒரு உடல் எடையை குறைக்கும் விளம்பரத்தில் எடை குறைப்பதற்கு முன், பின் என்று இரண்டு போட்டோக்களில் (மேலே பார்க்கவும்).

* இவர் படங்களில் பெரும்பாலும் குற்றம் செய்யாத அப்பாவிகள் தான் துரத்தப்படுவார்கள். கொலை பழி அவர்கள் மேல் விழும். அவர் 'எப்பொழுதும்' தப்பித்து தான் நிரபராதி என்று நிரூபிப்பார்.

* இவரின் ஹீரோக்கள் ஒரு இடத்தில் (முக்கியமாக பொதுமக்கள் கூடும் இடத்தில்) வசமாக மாட்டிக்கொள்ளும் போது அங்கிருந்து தப்பிப்பதற்கென்றே ஒரு டெம்ப்ளேட் வைத்திருக்கிறார். அதாவது அந்த இடத்தில் ஏதாவது ஒரு குழப்பம் உண்டாக்குவது. அந்த களேபரத்தில் அனைவரும் கலையும் போது கூட்டத்தோடு கூட்டமாக தப்பிப்பது என்பது நம்ம தமிழ் சினிமா ஆலமர பஞ்சாயத்து சீன் போன்றது. ஆனால், ஒவ்வொரு முறையும் வித்தியாசமாக தான் செய்வார் நம்ம ஹீரோ. ஏலம் நடக்கும் இடத்தில் பைத்தியமாக நடித்து ஏலத்தொகையை குறைத்து கேட்டு 'பத்திரமாக' போலீஸிடம் மாட்டுவது, துப்பாக்கியால் மேலே சுட்டு களேபரத்தை உண்டாக்குவது போன்றவை.

உண்மையிலேயே இவர் படங்களை ரசிக்க வேண்டுமென்றால் சப்-டைட்டிலோடு பாருங்கள். ஒவ்வொரு படத்தையும், அதன் ஒவ்வொரு வசனத்தையும் புரிந்து கொண்டு படம் பாருங்கள். ரசிப்பீர்கள்.

கீழ இவர பாருங்க. ஒரு அஞ்சு நிமிஷம் இவர குருகுருனு பாத்தா, விடாம கெக்கெ பிக்கனு சிரிக்க தோனுதுதான? ஆனா இவரு தான் Master of Suspense.

மேலே - Yousuf Karsh-ன் போர்ட்ரெய்ட்