Wednesday, December 23, 2015

உத்தம வில்லன் (2015)

நேத்து தான் பார்த்தேன். படம் நல்லாருக்கு.


மனோரஞ்சன் சாகப்போறவன். அதனால் கடைசியா ஒரு காமெடி படம் எடுக்க முடிவு செய்கிறான். பர்சனலா சோகம் என்றாலும், கடைசி படம் காமெடியே இருக்கனும்ங்கிற அந்த contra தான் படம் முழுவதும். நிஜத்தில் சாகப்போனாலும், கதையில் ம்ருத்யுஞ்சன்.

டைட்டில்ல ஆரம்பிச்சு பல இடங்கள்ல அந்த contra பார்க்க முடிஞ்சது. சோகம்-காமெடி-சோகம்-காமெடி என்ற வரிசை படம் முழுவதும். நிஜத்தில் இறப்பதும், ஸ்க்ரீனில் ம்ருத்யுஞ்சனாக நிலைப்பதும். நம்மால ஜெயிக்க முடியாததை கனவில் கொண்டுவருவதில்லையா?

கமல் படங்களில் சொன்னது நடக்கிறது என்ற ஒரு 'வஸ்து' உலவுகிறது. சுனாமி மாதிரி. இந்த படத்துக்கப்புறம் கேபி போயிட்டார். ஆனால், "டேய் என்னடா சொல்ற?"-னு குரல் கம்மி பேசுவதில் இருந்து, மனுஷன் நல்லாத்தான் செய்திருக்கார். சில இடங்களில் அவர் வசனமே நாஸ்டால்ஜிக்கா இருந்தது. உதா, நாகேஷின் சில வசனங்கள் "Long long ago, so long ago, no body could say how long ago.

'இளவேனில் இது வைகாசி மாதம்' பூஜா குமாருக்கு நல்ல ரோல் (கடைசியில 'யா அல்லா'-ங்கிறார்). ஆன்ட்ரியாவுக்கு (நிஜ) கிஸ் வேற (கவனிச்சீங்களா)? ஆனாலும், ஒரு நடிகன் 2-3 சைட் வெச்சிருக்கிறது பேஷன் போல. ஒவ்வொரு 7 வருஷத்துக்கும் நம் உடல் மறுபிறவி எடுக்கிற மாதிரி, பிறவிக்கு ஒன்னா? அதைப்பத்தின எந்த கழிவிறக்கமும் இல்லாத...............கூப்பிடுங்கடா அந்த மாதர் சங்கத்தை.

படத்தின் பெரிய குறை: சோகம்+காமெடி மிக்ஸில் காமெடி மிஸ் ஆவது. சிரிப்பே வரவில்லை. குழந்தைகளுக்கான பேன்டஸி கதையை பெரியவர்களுக்கு கொடுத்தது போலிருந்தது. வசனம் கமல் போல. வழக்கமான போர் அடிக்கும் வசனங்கள் (சுங்கம் தவிர்த்த சோழனிடம் கர்வம் தவிர்க்க சொல்). இன்னொரு குறை, பின்னனி இசை. சதா இம்சிக்கிறது. சில இடங்களில் நன்றாக இருந்தாலும், பல இடங்களில் ஆரம்ப கால ரஹ்மான் படங்கள் போல காதை அடைக்கிறது.

வழக்கம் போல இரணிய வதத்துக்கு பதில் நரசிம்ம வதம், 'ஹரி ஹரி சொரி சொரி'-னு நரசிம்மரே சொறிஞ்சு சாகிறதுனு குசும்புக்கு குறைச்சல் இல்ல.

மறந்திட்டேனே, அன்பே சிவம் படத்துக்கு இயக்கம் சுந்தர்.சி மாதிரி, இந்த படத்துக்கு ரமேஷ் அர்விந்தாம்

இன்னும் 5 வருஷம் கழிச்சு வந்திருந்தா ஓடியிருக்கும், குணா போல.